அருணாச்சல பிரதேச பாஜக சட்டப்பேரவைக் குழு தலைவராக பெமா காண்டு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மக்களவைத் தேர்தலுடன் அருணாச்சல பிரதேச சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 60 தொகுதிகளில், பாஜக 46 இடங்களில் வென்று அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது.
இதைத்தொடர்ந்து மேலிட பார்வையாளர் ரவிசங்கர் பிரசாத், தருண் சக் தலைமையில் நடைபெற்ற பாஜக எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில், கட்சியின் சட்டப் பேரவைக் குழு தலைவராக பெமா காண்டு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பின்னர், ஆளுநர் கே.டி. பர்நாயக்கை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். அருணாசல பிரதேச தலைநகர் இடாநகரில் ஜூன் 13-ஆம் தேதி காலை முதல்வர் பதவி ஏற்பு விழா நடைபெறுகிறது.