புதுமை படைக்கும் கூகுள் தமிழில் ஜெமினி AI!
Jul 31, 2025, 12:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புதுமை படைக்கும் கூகுள் தமிழில் ஜெமினி AI!

Web Desk by Web Desk
Jun 19, 2024, 09:45 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கூகுளின் AI ஜெமினி, இந்தியாவில் அறிமுகமாகி ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு
அந்நிறுவனம், ஜெமினி AI அசிஸ்டண்ட் செயலியில் புதிய அம்சத்தை, அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த ஜெமினி AI செயலி, இனி ஆங்கிலம் மற்றும் தமிழ் உட்பட 9 இந்திய மொழிகளில் செயல்படும் என கூறப்பட்டுள்ளது. இது குறித்த ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.

அறிவியல் உலகில் கண்டுபிடிக்கப்படும் எந்த ஒரு தொழில்நுட்ப மாற்றமும், மனிதகுல முன்னேற்றத்துக்கும்,வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் பயன்படுகிறது. இன்றைய உலகத்தில், Artificial Intelligence எனப்படும் செயற்கை நுண்ணறிவு மிகப்பெரிய முன்னேற்றமாக கருதப்படுகிறது. அனைத்து இடங்களிலும் , மக்களுக்கு அன்றாட செயலிகளில் தொடங்கி அசாதாரண செயல்களை செய்வது வரை இந்த AI பெரிய உதவியாக இருக்கிறது.

இந்த செயற்கை நுண்ணறிவு சந்தையில் OPEN AI, X-AI என பல நிறுவனங்கள் இருந்தாலும், கூகுளின் ஜெமினி AI முன்னணியில் இருக்கிறது.

கூகுள் ஜெமினி AI என்பது கூகுள் உருவாக்கிய செயற்கை நுண்ணறிவு அமைப்பாகும். ஆங்கிலம் மற்றும் இந்தி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, தமிழ், தெலுங்கு, உருது ஆகிய ஒன்பது இந்திய மொழிகளில் இந்த ஜெமினி AI உருவாக்கப்பட்டுள்ளது. எனவே , இதனை பயன்படுவோர், எங்கு சென்றாலும் கூகுள் ஜெமினி AI உதவியாளருடன் தொடர்புகொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, சின்ன சின்ன வேலைகள் முதல் ஆக்கப்பூர்வமான திட்டங்கள் தீட்டுவது வரை, பல்வேறு பணிகளுக்காக இந்தியாவில் பலர் ஜெமினி AI-யைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், விருப்பமான மொழிகளில் தங்களின் உற்பத்தித்திறன் மற்றும் படைப்பாற்றலை மேம்படுத்துவதற்கு வசதியாக அமைக்கப்பட்டுள்ள, இந்த ஜெமினி AI புதிய அம்சங்கள் சந்தையில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தட்டச்சு செய்வது, குரல் கட்டளைகள் இடுவது மற்றும் படப் பதிவேற்றங்கள் உள்ளிட்ட பல உள்ளீட்டு முறைகளால் பயன்படுத்துவோருக்கு, இந்த ஜெமினி AI, மொபைல் பயன்பாட்டில் புதிய அனுபவத்தைத் தரும் என்று தெரியவருகிறது.

தமது தேவைகளுக்கு ஏற்ப இந்த ஜெமினி AI உதவியாளரைபயன்படுத்திக் கொள்ளவும் இந்த புதிய செயலி இடம் கொடுக்கும்

ஆண்ட்ராய்டு மொபைல் சாதனங்களில் ஜெமினி AI செயலியை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் அல்லது கூகுள் அசிஸ்டண்ட் மூலம் தேர்வு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்றாட நினைவூட்டல்களை மேலும் குறிப்பிட்ட தொலைபேசி எண்ணை அழைக்கச் சொல்வது என்று Google Assistant மூலம் கிடைத்த அத்தனை வசதிகளையும் Gemini AI செயலி மூலமாகவும் பயன்படுத்திக் கொள்ளமுடியும் என்றும், ஆப்பிள் iOS பயன்படுத்துவோரும் , ஜெமினி AI செயலியைப் பயன்படுத்த முடியும் என்றும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கூகுளின் மிகவும் திறமையான AI மாடலான, ஜெமினி அட்வான்ஸ்டு, இப்போது இந்தி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, தமிழ், தெலுங்கு மற்றும் உருது ஆகிய மொழிகளிலும் செயல்படுகிறது. ள்ளடக்கத்தை செயலாக்கவும் புரிந்துகொள்ளவும் அனுமதிக்கிறது.

மொத்தமாக 1,500 பக்கங்கள் வரை, பெரிய ஆவணங்களைப் பதிவேற்றலாம் மற்றும் சுருக்கலாம் அல்லது 100 மின்னஞ்சல்களைப் பகுப்பாய்வு செய்யலாம் என்ற வகையில் ஜெமினி அட்வான்ஸ்டு AI, நுண்ணறிவுகளை திறமையான தகவல் செயலாக்கத்தை எளிதாக்குகிறது.

இந்த ஜெமினி AI பயன்படுத்துவோரின் நம்பிக்கையைப் பேணுவதற்கும் முக்கியமான அவர்களின் தகவல்களைப் பாதுகாப்பதற்கும் கூகுள் நிறுவனம் அதிக கவனம் எடுத்துக்கொள்வதாக கூகுள் தலைவர் சுந்தர்பிச்சை தெரிவித்துள்ளார்.

மொபைல் பயன்பாட்டில் AI ஒரு புதுமை. அதிலும் ஜெமினி AI மேலும் பல புதுமைகளைப் படைத்து வருகிறது.

Tags: Innovative Google Gemini AI in Tamil!
ShareTweetSendShare
Previous Post

காலத்திற்கு ஏற்ப உருமாறும் காமெடி மாறிவரும் ரசனை!

Next Post

உலகிலேயே இந்தியாவில்தான் அதிக பெண்கள் வாக்களித்தனர்! – பிரதமர் நரேந்திர மோடி

Related News

ஆட்சியில் பங்கு தந்தால் மட்டுமே திமுகவோடு கூட்டணி – காங்கிரஸ் நிர்வாகி பேச்சு!

காதல் தகராறில் காரை ஏற்றி மாணவர் கொடூர கொலை : திமுக பிரமுகரின் பேரன் கைதான பின்னணி!

அமலாக்கத்துறை சம்மன் – நடிகர் பிரகாஷ் ராஜ் ஆஜர்!

தமிழ்நாடு வணிகர் சங்க தலைவர் விக்ரமராஜா பங்கேற்ற பொதுக்குழு கூட்டத்தில் மோதல்!

திருச்சி : சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ரூ.1.27 கோடி காணிக்கை!

பர்கூர் அருகே நார் மில் குடோனில் தீ விபத்து!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பூரில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான பள்ளியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை : பொதுமக்கள் சாலை மறியல்!

‘சயாரா’ திரைப்படத்தின் வெற்றி குறித்து அமீர்கான் கருத்து!

ஈரோட்டில் ஓடும் ரயிலில் இருந்து கீழே விழுந்த நபரை காப்பாற்றிய ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்!

திருத்தணி முருகன் கோயிலில் 7 நாட்களில் ரூ.64 லட்சம் உண்டியல் காணிக்கை!

“உஸ்தாத் பகத்சிங்” படத்தில் பவன் கல்யாணின் படப்பிடிப்பு காட்சிகள் நிறைவு!

மாசாணியம்மன் கோவிலில் 75 லட்சத்து 46 ஆயிரத்து 650 ரூபாய் உண்டியல் காணிக்கை!

ஆணவப் படுகொலைகளை தடுக்க கடுமையான சட்டங்கள் தேவை – நயினார் நாகேந்திரன்

இன்றைய தங்கம் விலை!

சேலம் – ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!

திருமணத்தை மீறிய உறவு – தட்டிக்கேட்ட கணவரை கொலை செய்ய முயன்றவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies