விஜய் சேதுபதிக்கு எதற்காக பேனர் என்று கேட்டவர்களுக்கெல்லாம் பதிலளிக்கும் வகையில் மகாராஜா திரைப்படம் அமைந்திருப்பதாக நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், பாரதிராஜா, நடிகை அபிராமி, மம்தா மோகன்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்து வெளியான படம் மகாராஜா. இந்த படம் திரைக்கு வந்த நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய இயக்குநர் நித்திலன், இந்த படத்தில் கிடைத்த சில எதிர்மறையாக விமர்சனங்களை அடுத்த படத்தில் திருத்திக்கொள்வதாக தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து பேசிய நடிகர் விஜய் சேதுபதி, மகாராஜா படத்தின் மீது நிறைய நம்பிக்கை இருந்தது எனவும், படத்தின் கதை பிரம்மிப்பை கொடுத்தது எனவும் தெரிவித்தார்.