விரைவான விசாரணை மூலம் நீதி கிடைக்கச் செய்வதே சரியான நீதியாகும் : முன்னாள் நீதிபதி நாகமுத்து
Sep 8, 2025, 03:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விரைவான விசாரணை மூலம் நீதி கிடைக்கச் செய்வதே சரியான நீதியாகும் : முன்னாள் நீதிபதி நாகமுத்து

Web Desk by Web Desk
Jun 25, 2024, 05:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குற்றச் சம்பவங்கள் தொடர்பான செய்தியை வெளியிடும்போது மேம்போக்கான தகவல்களை மட்டும் வைத்து செய்தி வெளியிடுவதை ஊடகவியலாளர்கள் தவிர்க்க  வேண்டும் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியும், உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான எஸ். நாகமுத்து தெரிவித்துள்ளார்.

பாரதிய நியாய சன்ஹிதா 2023 (இந்திய நீதிச் சட்டம்), பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா 2023 (இந்திய சிவில் பாதுகாப்புச் சட்டம்), பாரதிய சாக்ஷயா அதினியம் 2023 (இந்திய சாட்சியச் சட்டம்) ஆகியவற்றுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்த நிலையில், இந்தப் புதிய குற்றவியல் சட்டங்கள் வரும் ஜூலை 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகின்றன.

இந்த மூன்று குற்றவியல் சட்டப் பிரிவுகள் பற்றி  மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் முக்கியமான பணியை மேற்கொள்ளும், ஊடகவியலாளர்களுக்கு அது தொடர்பான பயிலரங்கம் சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் சார்பில், சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக வளாகத்தில் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியும், உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான எஸ். நாகமுத்து கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் உரையாற்றிய முன்னாள் நீதிபதி நாகமுத்து,

ஊடகவியலாளர்களுக்குப் புதிய குற்றவியல் சட்டங்கள் பற்றிய சரியான புரிதல்கள் இருக்க வேண்டும் என்று அப்போது  அவர் கூறினார். இந்த சட்டங்கள் பற்றிய செய்திகள் வெளியிடும் பொழுது பொறுப்புடனும், பொதுநலத்துடனும், கண்ணியத்துடனும் செய்திகளை வெளியிட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். பாலியல் வன்கொடுமையால்   பாதிக்கப்பட்ட நபர்களின் அடையாளங்களை  செய்திகளில் வெளியிடுவதை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும் என்பதை அவர் அறிவுறுத்தினார்.

குற்றச் சம்பவங்கள் தொடர்பான செய்தியை வெளியிடும்போது மேம்போக்கான தகவல்களை மட்டும் வைத்து செய்தி வெளியிடுவதை ஊடகவியலாளர்கள் தவிர்க்க  வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

2024 ஜூன் 30-ம் தேதி இரவு வரை பதிவு செய்யப்படும் வழக்குகள் பழைய குற்றவியல் சட்டங்களின் கீழ் தான் பதிவு செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார். ஜூலை 1-ம் தேதி அதிகாலை முதல் பதிவு செய்யப்படும்  வழக்குகள் புதிய சட்டங்களின் கீழ் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறும் என்று அவர் கூறினார்.

புதிய குற்றவியல் சட்டங்களில் காலத்திற்கேற்ப மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். குறிப்பிட்ட சில குற்றங்களுக்கு தண்டனைகள் இல்லாமல் சமூகப் பணிகளைச் செய்யும் அம்சம் புதிய சட்டங்களில் சேர்க்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஏற்கனவே மரண தண்டனை விதிக்கப்பட்ட சில குற்றங்களுக்கு புதிய சட்டங்களில் ஆயுள் தண்டனை விதிக்க வகை செய்யப்பட்டுள்ளதாகவும், ஏற்கனவே ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சில குற்றங்களுக்கு குறிப்பிட்ட கால அளவு மட்டுமே சிறை தண்டனை விதிக்க புதிய சட்டங்களில் வகை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பழைய சட்டங்களின் கீழ் ஏற்கனவே உள்ள வழக்குகள் தேங்கி இருப்பதாகவும், அவற்றை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் அதற்கு சற்று கால அவகாசம் ஆகும் என்றும் அவர் கூறினார்.

தொடக்கத்தில் சில நடைமுறைச் சிரமங்கள் ஏற்பட்டாலும், பல ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கும் காலனியாதிக்க கால குற்றவியல் சட்டங்களை, நமது நாட்டின் நடைமுறைக்கு ஏற்றவாறு மாற்ற வேண்டிய தேவையை   அவர் எடுத்துரைத்தார். இந்தப் புதிய குற்றவியல் சட்டங்கள் காலத்தின் தேவை என்றும் அவர் கூறினார்.

இந்த மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் விரிவான மற்றும் தெளிவான விளக்கங்களை அவர் எடுத்துரைத்தார்.

Tags: Justice through speedy trial is the right justice: Former Justice Nagamuthu
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த சத்தீஸ்கர் முதலமைச்சர்!

Next Post

ஜெ.பி.நட்டாவை சந்தித்த தெலங்கானா முதல்வர்!

Related News

லாக்கப் மரணங்களில் 40% பேர் SC,ST – வெளியான அதிர்ச்சி தகவல்!

திண்டுக்கலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிரச்சார வாகனத்தை  முற்றுகையிட்ட தவெக-வினர்!

நைஜீரியா : பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 60-க்கும் மேற்பட்டோர் பலி!

மும்பை : ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகள் கிர்கான் சௌபட்டி கடற்கரையில் கரைப்பு!

உத்தராகண்ட் : தண்டவாளம் மீது பாறைகள், மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு!

தூத்துக்குடி அருகே போலீசாரின் சிறப்பு கவனிப்புக்கு பிறகு மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்ட ரவுடி!

Load More

அண்மைச் செய்திகள்

ஆஸ்திரேலியாவில் குடும்பத்தினரை கொலை செய்த பெண்ணுக்கு 33 ஆண்டுகள் சிறை தண்டனை!

தெலுங்கானா : வெள்ளத்தில் சிக்கியிருந்த பேருந்தில் இருந்து பயணிகள் பத்திரமாக மீட்பு

பிரான்ஸ் : நிலச்சரிவால் திகைத்த மக்கள் – வீடியோ வைரல்!

திருவண்ணாமலை : ஆவணி மாத பௌர்ணமியையொட்டி பக்தர்கள் கிரிவலம்!

“குட் பேட் அக்லி” திரைப்படத்தில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

பீகார் : காங்., எம்.பியை தோளில் சுமந்த விவசாயிகள் – விவசாயிகளை காங்கிரஸ் அவமதித்து விட்டதாக பாஜக கண்டனம்!

குறைந்த யமுனை நீர்மட்டம் – சீராகும் டெல்லியின் நிலைமை!

ஜிஎஸ்டி வரிக்குறைப்புக்கு தமிழக அரசும், திமுக கூட்டணி கட்சிகளும் நன்றி தெரிவிக்கவில்லை : தமிழிசை செளந்தரராஜன்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் – சாம்பியன் பட்டம் வென்றார் சபலென்கா!

உத்தரகாசி பகுதியில் மீண்டும் மேகவெடிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies