விரைவான விசாரணை மூலம் நீதி கிடைக்கச் செய்வதே சரியான நீதியாகும் : முன்னாள் நீதிபதி நாகமுத்து
Jan 15, 2026, 11:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விரைவான விசாரணை மூலம் நீதி கிடைக்கச் செய்வதே சரியான நீதியாகும் : முன்னாள் நீதிபதி நாகமுத்து

Murugesan M by Murugesan M
Jun 25, 2024, 05:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குற்றச் சம்பவங்கள் தொடர்பான செய்தியை வெளியிடும்போது மேம்போக்கான தகவல்களை மட்டும் வைத்து செய்தி வெளியிடுவதை ஊடகவியலாளர்கள் தவிர்க்க  வேண்டும் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியும், உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான எஸ். நாகமுத்து தெரிவித்துள்ளார்.

பாரதிய நியாய சன்ஹிதா 2023 (இந்திய நீதிச் சட்டம்), பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா 2023 (இந்திய சிவில் பாதுகாப்புச் சட்டம்), பாரதிய சாக்ஷயா அதினியம் 2023 (இந்திய சாட்சியச் சட்டம்) ஆகியவற்றுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்த நிலையில், இந்தப் புதிய குற்றவியல் சட்டங்கள் வரும் ஜூலை 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகின்றன.

இந்த மூன்று குற்றவியல் சட்டப் பிரிவுகள் பற்றி  மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் முக்கியமான பணியை மேற்கொள்ளும், ஊடகவியலாளர்களுக்கு அது தொடர்பான பயிலரங்கம் சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் சார்பில், சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக வளாகத்தில் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியும், உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான எஸ். நாகமுத்து கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் உரையாற்றிய முன்னாள் நீதிபதி நாகமுத்து,

ஊடகவியலாளர்களுக்குப் புதிய குற்றவியல் சட்டங்கள் பற்றிய சரியான புரிதல்கள் இருக்க வேண்டும் என்று அப்போது  அவர் கூறினார். இந்த சட்டங்கள் பற்றிய செய்திகள் வெளியிடும் பொழுது பொறுப்புடனும், பொதுநலத்துடனும், கண்ணியத்துடனும் செய்திகளை வெளியிட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். பாலியல் வன்கொடுமையால்   பாதிக்கப்பட்ட நபர்களின் அடையாளங்களை  செய்திகளில் வெளியிடுவதை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும் என்பதை அவர் அறிவுறுத்தினார்.

குற்றச் சம்பவங்கள் தொடர்பான செய்தியை வெளியிடும்போது மேம்போக்கான தகவல்களை மட்டும் வைத்து செய்தி வெளியிடுவதை ஊடகவியலாளர்கள் தவிர்க்க  வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

2024 ஜூன் 30-ம் தேதி இரவு வரை பதிவு செய்யப்படும் வழக்குகள் பழைய குற்றவியல் சட்டங்களின் கீழ் தான் பதிவு செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார். ஜூலை 1-ம் தேதி அதிகாலை முதல் பதிவு செய்யப்படும்  வழக்குகள் புதிய சட்டங்களின் கீழ் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறும் என்று அவர் கூறினார்.

புதிய குற்றவியல் சட்டங்களில் காலத்திற்கேற்ப மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். குறிப்பிட்ட சில குற்றங்களுக்கு தண்டனைகள் இல்லாமல் சமூகப் பணிகளைச் செய்யும் அம்சம் புதிய சட்டங்களில் சேர்க்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஏற்கனவே மரண தண்டனை விதிக்கப்பட்ட சில குற்றங்களுக்கு புதிய சட்டங்களில் ஆயுள் தண்டனை விதிக்க வகை செய்யப்பட்டுள்ளதாகவும், ஏற்கனவே ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சில குற்றங்களுக்கு குறிப்பிட்ட கால அளவு மட்டுமே சிறை தண்டனை விதிக்க புதிய சட்டங்களில் வகை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பழைய சட்டங்களின் கீழ் ஏற்கனவே உள்ள வழக்குகள் தேங்கி இருப்பதாகவும், அவற்றை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் அதற்கு சற்று கால அவகாசம் ஆகும் என்றும் அவர் கூறினார்.

தொடக்கத்தில் சில நடைமுறைச் சிரமங்கள் ஏற்பட்டாலும், பல ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கும் காலனியாதிக்க கால குற்றவியல் சட்டங்களை, நமது நாட்டின் நடைமுறைக்கு ஏற்றவாறு மாற்ற வேண்டிய தேவையை   அவர் எடுத்துரைத்தார். இந்தப் புதிய குற்றவியல் சட்டங்கள் காலத்தின் தேவை என்றும் அவர் கூறினார்.

இந்த மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் விரிவான மற்றும் தெளிவான விளக்கங்களை அவர் எடுத்துரைத்தார்.

Tags: Justice through speedy trial is the right justice: Former Justice Nagamuthu
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த சத்தீஸ்கர் முதலமைச்சர்!

Next Post

ஜெ.பி.நட்டாவை சந்தித்த தெலங்கானா முதல்வர்!

Related News

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிறைவு- முதலிடம் பிடித்த பாலமுருகன்

தேனியில் பென்னிகுவிக் பிறந்தநாள் கோலாகலமாக கொண்டாட்டம்

அதிபர் டிரம்புக்கு ஈரான் அரசு ஊடகம் கொலை மிரட்டல்!

ரஷ்யாவில் 146 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு இடைவிடாத பனிப்பொழிவு!

கன்றுகளுக்கு புற்கள் கொடுத்த பிரதமர் மோடி!

மேற்கு வங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

எதிர்கால போர்களுக்கு தயாராகி வருகிறோம் – உபேந்திர திவேதி

ராணுவ தினம் – குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து

“நாட்டை வழிநடத்தும் நிலைக்கு பெண்களின் பங்களிப்பு உயர்ந்துள்ளது”

விறுவிறுப்பாக நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி!

ஜனநாயக கடைமை ஆற்றிய RSS தலைவர்!

இந்திய ராணுவத்தின் வீரத்திற்கும், உறுதியான அர்ப்பணிப்பிற்கும் நாங்கள் வணக்கம் செலுத்துகிறோம் -பிரதமர் மோடி

78 வது இந்திய ராணுவ தினம் – அண்ணாமலை வாழ்த்து!

78 வது இந்திய ராணுவ தினம் – பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்து

பொங்கல்… பொங்கட்டும்! வாழ்க்கை.. செழிக்கட்டும்! – நயினார் நாகேந்திரன் பொங்கல் வாழ்த்து!

பொங்கல் திருநாளில் ஒவ்வொருவர் வாழ்விலும் செல்வம், மகிழ்ச்சி,புத்துணர்ச்சியைக் கொண்டு வரட்டும் – பாஜக தேசிய செயல் தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies