திமுக ஆட்சியின் இயலாமையே கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு காரணம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தை சட்டப்பேரவையில் விவாதிக்க அனுமதி கேட்ட அதிமுகவை நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சட்டப்பேரவை நிகழ்வுகளில் பங்கேற்க தடை விதித்து சபாநாயகர் உத்தரவிட்டார்.
இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி திமுக ஆட்சியின் இயலாமையே கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு காரணம் என குற்றம் சாட்டினார். சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் பேச அனுமதி மறுக்கும் திமுக அரசின் சர்வாதிகார போக்கு கடும் கண்டனத்திற்குரியது என தெரிவித்த அவர், அரசின் அலட்சிய போக்கால் தமிழகம் முழுவதும் கஞ்சா, கள்ளச்சாராய விற்பனை அதிகரித்துள்ளதாக குற்றம் சாட்டினார்.