பிரதமர் மோடியின் மிரட்டல் பணிந்த ஜி-20 நாடுகள் வெளியான அதிர்ச்சி தகவல்!
Aug 10, 2026, 05:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் மோடியின் மிரட்டல் பணிந்த ஜி-20 நாடுகள் வெளியான அதிர்ச்சி தகவல்!

Murugesan M by Murugesan M
Jul 2, 2024, 09:45 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஜி20 நாடுகளின் அமைப்பில் இருந்து இந்தியா வெளியேறும் என்று பிரதமர் மோடி எச்சரித்ததாக அதிர்ச்சி தகவலை நிதி ஆயோக்கின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியும், இந்தியாவின் ஜி20 மாநாட்டு தலைமை பிரதிநிதியாகவும் இருந்த அமிதாப் காந்த் தெரிவித்திருக்கிறார். இது குறித்த ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.

கடந்த வெள்ளிக்கிழமை, புது டெல்லியில் தீன் மூர்த்தி மார்க், பிரதம மந்திரி சங்க்ரலயா கலையரங்கத்தில், டாக்டர் பாலசுப்ரமணியம் எழுதிய, ‘Power Within: The Leadership Legacy of Narendra Modi’ என்ற நூலின் பிரமாண்ட வெளியீட்டு விழா நடைபெற்றது.

பிரதமர் மோடியின் தலைமைப் பண்புகளை விளக்கும் இந்த நூல், பிரமல் குழுமத்தின் தலைவரான அஜய் பிரமல், இந்தியாவின் ஜி20 தலைமை பிரதிநிதியும், நிதி ஆயோக்கின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியுமான அமிதாப் காந்த், NASSCOM நாஸ்காம் தலைவரான தேப்ஜானி கோஷ் மற்றும் பெங்களூர் இந்திய தொழில்நுட்ப கழகத்தின் பேராசிரியர் பி.மகாதேவன் ஆகியோர் முன்னிலையில் வெளியிடப்பட்டது.

இவ்விழாவில் உரையாற்றிய அமிதாப் காந்த், ஜி20 மாநாட்டில் இந்தியாவின் தலைமை பிரதிநிதியாக பணியாற்றிய போது , மோடியின் தலைமைப் பண்புகளைப் பட்டியலிட்டு பாராட்டினார்.

இந்தியாவின் தலைமைப் பண்பை வெளிப்படுத்த கிடைத்த ஒரு அரிய வாய்ப்பாக ஜி 20 உச்சி மாநாடு அமைந்திருந்தது என்றும், பல்வேறு சர்வதேச அமைப்புக்களில் இந்தியா அங்கம் வகித்தாலும்,ஜி 20 அமைப்புக்குத் தனி சிறப்பு உண்டு என்றும் அவர் கூறினார்.

உலகின் சுமார் 85 சதவீத பொருளாதார மதிப்பையும், 57 சதவீத வர்த்தகத்தையும், சுமார் 65 சதவீத மக்கள்தொகையை ஜி20 கூட்டமைப்பு நாடுகளே கொண்டுள்ளன. எனவே இந்த ஜி20 மாநாட்டில் எடுக்கும் முடிவுகள்,சர்வதேச அளவில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தும்.

ஒரே பூமி ஒரே குடும்பம் ஒரே எதிர்காலம் ‘ என்பதை இந்தியாவின் ஜி 20 தலைமையின் கருப்பொருள் என்று அறிவித்த பிரதமர் மோடி தலைமையில், கடந்த செப்டம்பர் 9 மற்றும் 10 தேதிகளில், இந்தியாவில் நடந்த ஜி 20 உச்சி மாநாட்டில், ‘டெல்லி பிரகடனம் ‘ வெளியிடப்பட்டது.

ஜி 20 அமைப்பின் உறுப்பு நாடுகளுக்கிடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்தி, அனைத்து நாட்டுத் தலைவர்களும் கையெழுத்திட்டு டெல்லி பிரகடனம் அறிவிக்கப்பட்டது பிரதமர் மோடியின் தலைமைப் பண்புக்கு ஒரு சிறந்த உதாரணம்.

இந்த டெல்லி பிரகடனத்தை உருவாக்குவதற்கு, கிட்டத்தட்ட 300 மணிநேர பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு, மொத்தம் 16 வரைவுகள் உருவாக்கப்பட்டன என்றும், ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒருமுறை பிரதமர் மோடி பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றத்தை நேரடியாக கண்காணித்துக் கொண்டிருந்தார் என்றும் அமிதாப் காந்த் தெரிவித்தார்.

பல்வேறு நாட்டுத் தலைவர்களின் கோரிக்கைகளை கவனத்தில் கொண்டு, யாருடைய கோரிக்கைகளையும் விட்டுக் கொடுக்காமல், பிரதமர் மோடி செயல்பட்டதால், எல்லோரும் முழுமனதுடன், டெல்லி பிரகடனத்தை ஏற்றுக் கொண்டனர் என்றும் அமிதாப் காந்த் கூறினார்.

இவ்வாறு, பிரதமர் மோடியின் தலைமைப் பண்பை விவரித்த அமிதாப் காந்த், ஒரு கட்டத்தில், கூட்டு பிரகடனம் ஏற்படவில்லையெனில், ஜி 20 அமைப்பிலிருந்து இந்தியா வெளியேறும் என்று பிரதமர் மோடி கடுமையாக மிரட்டும் தொனியில் எச்சரித்தார் என்றும் அமிதாப் காந்த் தனது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.

இன்று டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளில் இந்தியா சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது என்றால் , அதற்கு 100 நகரங்களில் 100 நாட்களில் 100 டிஜிட்டல் மேளாக்களை நடத்த வேண்டும் என்று திட்டமிட்டு பிரதமர் மோடி செயல்படுத்தியதே காரணம் என்று நாஸ்காம் தலைவரான தேப்ஜானி கோஷ் ,பிரதமர் மோடியின் தலைமைப் பண்பை பாராட்டி இருக்கிறார்.

மேலும், இந்தியாவின் மிகவும் பின்தங்கிய 112 மாவட்டங்களைப் பற்றி யோசித்து அவற்றை முன்னேற்றுவதற்கு திட்டம் வகுத்த பிரதமர் மோடியின் தலைமைப் பண்பு உலகத் தலைவர்களுக்கு வழி காட்டக் கூடியது என்றும் தெரிவித்தார்.

பல்வேறு நிலைகளில் பல்வேறு இடங்களில் பல்வேறு சிந்தனைகளுடன் வாழும் பல்வேறு தரப்பட்ட மக்களை முன்னேற்றப் பாதையில் அழைத்து செல்லும் ஆளுமை கொண்ட ஒரு அசாதாரண தலைவர் பிரதமர் மோடி என்பதை பாலசுப்பிரமணியன் எழுதியுள்ள இந்நூல் விவரிக்கிறது

Tags: Shocking information released by G-20 countries who bowed to Prime Minister Modi's threat!
Share
Tweet
SendShare
Previous Post

KOLLYWODD TO HOLLYWOOD ரஜினியின் பிறமொழிப் படங்கள்!

Next Post

புதிய குற்றவியல் சட்டங்கள்! : தமிழகத்தில் 100 வழக்குகள் பதிவு!

Related News

ஏஐ.யால் மென்பொருள் பொறியாளர்களின் வேலைவாய்ப்பு கேள்விக்குறி;ஸ்ரீதர் வேம்பு

ஆபரேஷன் சிந்தூரில் நடந்தது என்ன? : தாக்குதல்களை முடிப்பதற்கு முன்பே போர்நிறுத்தத்திற்கு கெஞ்சிய பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

பிறப்புரிமை குடியுரிமைக்கு தடை : புதிய உத்தரவு பிறப்பித்த ட்ரம்ப் : அமெரிக்காவில் உள்ள இந்தியர்களுக்கு பாதிப்பா? – சிறப்பு தொகுப்பு!

தவெகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏக்கள், அமைச்சர்களுக்கு கொடுக்கப்படும் பதவி லஞ்சமாகத்தான் கருதப்படும் – திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன்

மற்றொரு பாகிஸ்தானாக மாறும் வங்கதேசம் : ஷேக் ஹசீனாவின் மகன் எச்சரிக்கை – சிறப்பு தொகுப்பு!

ஆடி அமாவாசை – காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

மருந்து நிறுவனங்களிடம் இருந்து பரிசுப் பொருட்கள் அல்லது பண உதவிகளை மருத்துவர்கள் பெறக்கூடாது – சுகாதார அமைச்சகம் உத்தரவு!

கோவையில் நடைபெறும் சுதேசி கண்காட்சி 2026 – பார்வையாளர்களை கவர்ந்த ஆபரேஷன் சிந்தூர் புத்தக ஸ்டால்!

கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் ஆன்மிகத்தின் சிறப்பிடமாக புதுச்சேரி திகழ்கிறது – அமித் ஷா புகழாரம்!

உயர்ரக போதை பொருள் புழக்கம் – பொத்தேரியில், பிரபல தனியார் கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் போலீசார் சோதனை!

நிபந்தனைகளை ஏற்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது – ஈரான் திட்டவட்டம்!

வேளச்சேரியில் திரைப்பட ப்ரோமோஷன் காரணமாக போக்குவரத்து பாதிப்பு – நடிகர் ஹிப் ஹாப் ஆதி வருத்தம்!

அரசு வாகனம் வர தாமதம் – ஆட்டோவில் பயணம் செய்த மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி!

தவெகவில் 27 மாவட்ட செயலாளர்கள் நியமனம் – விஜயபாஸ்கர்களுக்கும் பதவி!

புதுச்சேரி  சென்ற மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு உற்சாக வரவேற்பு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உள்துறை அமைச்சர் அமித் ஷா சாமி தரிசனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies