வேலைவாய்ப்பு குறைவா? பொய் தகவல் பரப்புவோருக்கு மத்திய அரசு எச்சரிக்கை!
Oct 18, 2025, 04:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வேலைவாய்ப்பு குறைவா? பொய் தகவல் பரப்புவோருக்கு மத்திய அரசு எச்சரிக்கை!

Web Desk by Web Desk
Jul 11, 2024, 09:50 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வேலை வாய்ப்புகளை உருவாக்க போராடும் இந்தியா என்ற சிட்டிகுரூப்பின் அறிக்கையை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் நிராகரித்துள்ளது. மேலும், அரசின் அதிகாரப்பூர்வ தகவல்களையும் தரவுகளையும் சிட்டிகுரூப் கணக்கிடத் தவறிவிட்டதாகவும் மத்திய அரசு குற்றம் சாட்டி உள்ளது.

அது குறித்த ஒரு செய்தி தொகுப்பு.

சிட்டி குரூப்பின் பொருளாதார வல்லுனர்களான (Samiran Chakraborty) சாமிரன் சக்ரவர்த்தி மற்றும் (Baqar Zaidi) பக்கார் ஜைதி சமீபத்தில் ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டனர். அந்த அறிக்கையில் 7 சதவீத வளர்ச்சி விகிதத்தின் அடிப்படையில், ஆண்டுக்கு எட்டிலிருந்து ஒன்பது மில்லியன் வேலை வாய்ப்புக்களை மட்டுமே இந்தியாவால் உருவாக்க முடியும் என்று கூறியிருந்தனர்.

பொய்யான தரவுகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்த அறிக்கையை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் நிராகரித்துள்ளது.

இந்தியாவின் வேலை சூழ்நிலையைச் சிதைக்கும் விதமாக, ஆதாரமின்றி வெளியிடப்படும் அறிக்கைகள் வெளியிடுவோரை மத்திய அரசு கடுமையாக எச்சரித்துள்ளது.

மேலும், Periodic Labour Force Survey எனப்படும், ‘காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பு மற்றும் capital, labour, energy, materials and service அடிப்படையில், இந்திய ரிசர்வ் வங்கியின் K.L.E.M.S தரவுகள் போன்ற அதிகாரப்பூர்வ தகவல்களை கணக்கில் எடுக்காமல் இந்த அறிக்கை தயாரிக்கப் பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஆண்டுக்கு சராசரியாக 2 கோடி வேலை வாய்ப்புகள் என்ற கணக்கில், 2017-18 முதல் 2021-22 வரை 8 கோடிக்கும் அதிகமான வேலை வாய்ப்புகளை இந்தியா உருவாக்கி இருக்கிறது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் வேலையின்மை விகிதம் வேகமாக குறைந்து வருவதாக கூறியுள்ள மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், உற்பத்தி, சேவைகள், உள்கட்டமைப்பு மிக வேகமாக வேலைவாய்ப்புக்களை உருவாக்கி வருவதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

டிஜிட்டல் இந்தியா மூலமாக வேலை மற்றும் சேவைகளில் வேலை வாய்ப்புக்கள் கணிசமாக உயர்ந்து வருகிறது. EPFO ​​மற்றும் NPS தரவுகளும் இந்தியாவில் வேலைவாய்ப்பு விகிதம் அதிகரித்து வருவதையே காட்டுகின்றன.

இதற்கிடையில், கடந்த ஜூலை மாதம் 8ம் தேதி வெளிவந்த இந்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் , 2023-24 நிதியாண்டில் இந்தியாவில் 46.7 மில்லியன் வேலைகள் உருவாக்கப் பட்டுள்ளதாகவும், இந்தியாவின் மொத்த வேலைவாய்ப்பு 643.3 மில்லியனாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Lack of employment? Central government warning to spreaders of false information!
ShareTweetSendShare
Previous Post

தப்பிய போலே பாபா ஜாதி அரசியல் காரணமா?

Next Post

இந்தியா வந்தடைந்தார் பிரதமர் மோடி!

Related News

உடுமலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு – பொதுமக்கள் குளிக்க தடை!

தமிழகத்தில் 1,540 திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.14, 808 கோடி செலவிடப்படாமல் திரும்ப பெறப்பட்டுள்ளது!

திருவாடானை அருகே லஞ்சம் கேட்டு மிரட்டும் வருவாய் ஆய்வாளர்!

தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் செல்லும் ஆயிரக்கணக்கான மக்கள் – செங்கல்பட்டு அருகே கடும் போக்குவரத்து நெரிசல்!

3 மாத அரிசியை வழங்க மத்திய அரசு உத்தரவு – ஒரு மாத அரிசியை மட்டும் வழங்குவதாக தமிழக அரசு அறிவிப்பு!

கோவை ஜிடி அருங்காட்சியகத்தில் PERFORMANCE CAR பிரிவு திறப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் தொகுப்பு பிரம்மோஸ் ஏவுகணை – நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்!

தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் செல்லும் மக்கள் – ஆற்காட்டில் கடும் போக்குவரத்து நெரிசல்!

திட்டமின்மையால் விவசாயிகள் வயிற்றிலடிக்கும் விளம்பர மாடல் அரசு – நயினார் நாகேந்திரன்!

ரஷ்ய உடனான போரை உடனடியாக நிறுத்துக – ஜெலன்ஸ்கியிடம் வலியுறுத்திய ட்ரம்ப்!

போர் நிறுத்தத்தை மீறி ஆப்கன் மீது பாகிஸ்தான் தாக்குதல் – 3 கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட 10 பேர் பலி!

தென்கிழக்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி – வானிலை ஆய்வு மையம் தகவல்!

மதுரை மாநகராட்சி முறைகேட்டின் மர்மம் எப்போது விலகும்? : நயினார் நாகேந்திரன்

சென்னையில் வழக்கறிஞர் தாக்கப்பட்ட விவகாரம் – போலீசாருக்கு சரமாரி கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம்!

மக்களுக்கு திமுக கொடுத்தது அல்வா மட்டும்தான் – வினோஜ் பி.செல்வம்

தந்தையை இழந்த பெண் குழந்தைகளுக்கு சிறப்பு திட்டம் தேவை – வானதி சீனிவாசன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies