நம்மை வழிநடத்தி செல்லும் குருக்களுக்கு, குரு பூர்ணிமா தினத்தில் தலைவணங்கி மரியாதை செலுத்துவோம் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நமது வாழ்வில் சரியான பாதையைத் தேர்வு செய்யவும், நமது வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றுவதற்கும், குருக்கள் உதவுவதாக அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
நாம் யார் என்பதை உணர உதவும் பயணத்தில் நம்மை வழிநடத்திச் செல்லும் குருக்களுக்கு நன்றி கூற இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்வோம் எனவும் அண்ணமலை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.