மத்திய பட்ஜெட்டில் எந்தவித பாரபட்சமும் இல்லை என மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.
மத்திய பட்ஜெட்டில் எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டதாக தமிழகம், தெலங்கானா, கர்நாடகா மாநிலங்களின் முதல்வர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
இதனால் வரும் 27-ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என அவர்கள் அறிவித்தனர். இந்த நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, பட்ஜெட்டில் எந்தவித பாரபட்சமும் இல்லை என்றும், ஏற்கெனவே கடந்த ஆண்டு மே 23-ஆம் தேதி நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தை அரவிந்த் கெஜ்ரிவால், மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி ஆகியோர் புறக்கணித்ததாகவும் தெரிவித்தார்.
பட்ஜெட் வேறு, நிதி ஆயோக் வேறு என்று கூறிய அவர், மாநில முதல்வர்கள் தங்களுக்கு ஏதாவது பிரச்னை இருந்தால், கூட்டத்தில் பங்கேற்று முறையிடலாம் என்றும் அழைப்பு விடுத்தார்.