வங்கதேசத்தில் அதிரடி திருப்பம்! - பதவியை துறந்த ஷேக் ஹசீனா ஆட்சியை பிடித்த ராணுவம்!
Aug 15, 2025, 09:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வங்கதேசத்தில் அதிரடி திருப்பம்! – பதவியை துறந்த ஷேக் ஹசீனா ஆட்சியை பிடித்த ராணுவம்!

Web Desk by Web Desk
Aug 5, 2024, 09:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, தனது பதவியை ராஜினாமா செய்ததுடன், பிரதமர் இல்லத்தை விட்டு வெளியேறியுள்ளார். இதனை தொடர்ந்து, வங்க தேசத்தில் ராணுவ ஆட்சி பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

வங்கதேசத்தில் 2009ம் ஆண்டு முதல் ஆட்சி செய்து வந்த பிரதமர் ஷேக் ஹசீனா, கடந்த ஜனவரியில் நான்காவது முறையாக ஆட்சியைப் பிடித்தார்.

1971ம் ஆண்டு வங்க தேச சுதந்திரப்போரில் பங்கேற்றவர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த 2018ம் ஆண்டு அந்நாட்டு அரசு முடிவு செய்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம் நடத்தியதையடுத்து அரசு நிறுத்தி வைத்தது.

கடந்த சில மாதங்களுக்கு முன் இடஒதுக்கீட்டை மீண்டும் அமல்படுத்த போவதாக பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு அறிவித்தது. இதனை எதிர்த்து, வங்கதேச மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர்.

கடந்த மாதம் பிற்பகுதியில் தொடங்கிய போராட்டங்கள், ஷேக் ஹசீனாவுக்கு எதிரான இயக்கமாக மாறியது.

இதற்கு, திரையுலக நட்சத்திரங்கள், பிரபல இசைக்கலைஞர்கள் மற்றும் ஆடை உற்பத்தியாளர்கள் உட்பட சமூகத்தின் பல்வேறு பிரிவுகளின் ஆதரவு கிடைத்தது. ராப் பாடல்கள் மற்றும் சமூக ஊடக பிரச்சாரங்கள் மூலமாக பிரதமர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகரித்தன.

பிரதமர் ஷேக் ஹசீனா பேச்சுவார்த்தைக்கு விடுத்த அழைப்பை நிராகரித்த, போராட்டகாரர்கள் “மார்ச் டூ டாக்கா” திட்டத்தை அறிவித்தனர்.

வங்க தேசத்தின், 39 மாவட்டங்களில் மக்கள் பிரதிநிதிகளின் வீடுகள் , 20 அவாமி லீக் கட்சியின் மாவட்ட அலுவலகங்கள், காவல் நிலையங்கள் மற்றும் பிற அரசு அலுவலகங்கள் எல்லாம் சூறையாடப் பட்டன. ஆங்காங்கே போராட்டக்காரர்களுக்கும், அவாமி லீக் கட்சியினருக்கும் மோதல்கள் வெடித்தன.

வங்கதேச அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆளும் கட்சித் தலைவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் தீவைத்து எரிக்கப் பட்டன. இதுவரை நடந்த போராட்ட வன்முறைகளில் 300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக, நாடு தழுவிய காலவரையற்ற ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டது. நாடெங்கும் பொது விடுமுறை அறிவிக்கப் பட்டதோடு , இணைய சேவையையும் முடக்கப்பட்டன.

இதன் உச்சகட்டமாக போராட்டக் காரர்கள் பிரதமர் இல்லத்தை முற்றுகையிட்டதால், 76 வயதான வங்க தேச பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தனது சகோதரி ஷேக் ரிஹானாவுடன் சேர்ந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் டாக்காவை விட்டு வெளியேறி, இந்தியாவில் உத்தரப்பிரதேச மாநிலம் காஸியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்தில் தரையிறங்கினார்.

பிரதமரின் இல்லத்தை சூறையாடிய போராட்டக்காரர்கள், வங்க தேசத்தின் தந்தை என போற்றப்படும் முஜிபுர் ரஹ்மானின் சிலைகளை உடைத்து சேதப்படுத்தினர்.

இதனிடையே, தொலைக்காட்சியில் தோன்றி உரையாற்றிய வங்க தேச ராணுவத் தளபதி ஜெனரல் வாக்கர் உஸ் ஜமான் பிரதமரின் ராஜினாமாவை உறுதிப்படுத்தி இருக்கிறார். நாட்டை நிர்வகிப்பதற்காக இடைக்கால அரசு அமைக்கப்படும் எனவும், வன்முறைப் போராட்டங்களால் நாட்டின் பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், இந்தியாவின் எல்லைப் பாதுகாப்புப் படை 4,096 கிலோமீட்டர் இந்தியா-வங்கதேச எல்லையில் உள்ள அனைத்துப் பிரிவுகளுக்கும் ‘உயர் எச்சரிக்கை’ விடுக்கப் பட்டுள்ளது.. இந்திய எல்லைப் பாதுகாப்பை மதிப்பீடு செய்வதற்காக எல்லை பாதுகாப்பு படை இயக்குநர் ஜெனரல் தல்ஜித் சிங் சவுத்ரி மற்றும் பிற மூத்த அதிகாரிகள் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

Tags: Action turn in Bangladesh! - Sheikh Hasina abdicated and the army took power!
ShareTweetSendShare
Previous Post

ஒலிம்பிக் ஹாக்கி போட்டி! இந்திய அணிக்கு எதிரான நடுவர்கள் முடிவால் சர்ச்சை!

Next Post

இஸ்ரோ-நாசா திட்டம் விண்வெளிக்கு செல்லும் இரண்டாவது இந்தியர்!

Related News

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

மீண்டும் கையேந்தும் அவலம் : IMF- நிபந்தனைகளை நிறைவேற்ற தவறிய பாகிஸ்தான்!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 15 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது : பிரதமர் மோடி

நாகாலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் காலமானார்!

Load More

அண்மைச் செய்திகள்

காலநிலை மாற்றத்தால் இமயமலை பனிக்கட்டிகள் உருகும் தன்மை இரட்டிப்பாகி உள்ளது : அதிர்ச்சி தகவல்!

விடுமுறையையொட்டி திருச்செந்தூர் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

விடுமுறையையொட்டி திருப்பதியில் குவிந்த பக்தர்கள்!

சத்தீஸ்கர் : நக்சல் பாதிப்புள்ள 29 கிராமங்களில் சுதந்திர தின கொண்டாட்டம்!

வாஷிங்டனின் மிக மோசமான குற்றவாளி யார்? – அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எக்ஸ் வலைதளம் பதில்!

சுவாமிமலை முருகன் கோயிலில் தானமாக வழங்கப்பட்ட தங்கும் விடுதி பூட்டியே கிடக்கும் அவலம்!

சிறுநீரகத் திருட்டு : பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

ஆப்ரேஷன் சிந்தூரின் போது வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் ட்ரோன்கள் : வீடியோ வெளியிட்ட இந்திய ராணுவம்!

தேசிய போர் நினைவுச் சின்னத்தில் குடியரசுத் தலைவர் மரியாதை!

ஆசிய கோப்பையிலிருந்து இந்தியா வெளியேற வேண்டும் – ஹர்பஜன் சிங்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies