இஸ்ரோ-நாசா திட்டம் விண்வெளிக்கு செல்லும் இரண்டாவது இந்தியர்!
Jun 22, 2026, 07:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இஸ்ரோ-நாசா திட்டம் விண்வெளிக்கு செல்லும் இரண்டாவது இந்தியர்!

Murugesan M by Murugesan M
Aug 6, 2024, 09:45 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு நாசாவுடன் இஸ்ரோவின் முதல் கூட்டுப் பணிக்கான ‘முதன்மை விண்வெளி வீரராக’ குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா தேர்வு செய்யப் பட்டுள்ளார். இதனால், விண்வெளிக்குச் செல்லும் இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை கேப்டன் சுபான்ஷு சுக்லா பெறுகிறார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

2024ம் ஆண்டில் அமெரிக்கா சென்றிருந்த பிரதமர் மோடி, அதிபர் ஜோ பைடனை சந்தித்த பிறகு, அமெரிக்காவுடன் இணைந்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு இந்திய விண்வெளி வீரர்களை அனுப்பும் திட்டத்தை வெளியிட்டார்.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, இந்திய விண்வெளி வீரர் தேர்வு வாரியம், இந்திய விமானப்படையின் (IAF) சோதனை விமானிகளின் குழுவிலிருந்து குரூப் கேப்டன்கள் பிரசாந்த் பாலகிருஷ்ணன், அஜித் கிருஷ்ணன், அங்கத் பிரதாப் மற்றும் விங் கமாண்டர் சுபான்ஷு சுக்லா ஆகிய நான்கு விண்வெளி வீரர்களைத் தேர்ந்தெடுத்தது.

கடந்த ஜூலை 27ம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய விண்வெளி வீரர்கள் ஏற்கனவே ரஷ்யாவில் அடிப்படை விண்வெளிப் பயிற்சியை முடித்துவிட்டதாகவும், பெங்களூருவில் உள்ள இஸ்ரோவின் விண்வெளி வீரர் பயிற்சி நிலையத்தில் மேம்பட்ட பயிற்சிகளைப் பெற்று வருவதாகவும் மத்திய அமைச்சர் ஜிதேந்திரா, நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தான் இஸ்ரோவின் மனித விண்வெளி விமான மையம், அமெரிக்காவைத் தலைமையிடமாக கொண்ட ஆக்சிம் ஸ்பெஸ் உடன் இணைந்து சர்வ தேச விண்வெளி நிலையத்துக்கு செல்லவிருக்கும் நான்காவது ஆக்சிம் பணிக்காக குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா மற்றும் குரூப் கேப்டன் பிரசாந்த் பாலகிருஷ்ணன் ஆகிய இரண்டு இந்தியர்களை PRIME மற்றும் BACKUP மிஷன் விமானிகளாக ஒப்பந்தம் செய்திருக்கிறது .

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பறக்க மல்டிலேட்டரல் க்ரூ ஆபரேஷன் பேனல் மூலம் அங்கீகரிக்கப்படுவார்கள் என்றும், பரிந்துரைக்கப்பட்ட ககன்யாத்ரிகள் வரும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் இருந்து அதற்கான பயிற்சிகளைத் தொடங்குவார்கள் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

மேலும், இந்த இரண்டு விண்வெளிவீரர்களும், அறிவியல் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப செயல்விளக்க சோதனைகளை மேற்கொள்வார்கள் என்றும், விண்வெளி பயண நடவடிக்கைகளிலும் பங்கேற்பார்கள் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

1999ம் ஆண்டு கார்கில் போர் நடந்த போது 14 வயதான ஷுபான்ஷு சுக்லாவுக்கு இந்திய விமானப் படை வீரர்களின் வீரம் ஈர்த்தது. அப்போது தான், அவருக்கு இந்திய ராணுவத்தில் சேரவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.

உத்தர பிரதேசத்தின் லக்னோ நகரில் பிறந்த கேப்டன் ஷுபான்ஷு சுக்லா, நேஷனல் டிஃபென்ஸ் அகாடமியில் பட்டம் பெற்றிருக்கிறார். 2006ம் ஆண்டு ஜூலை மாதம் இந்திய விமானப்படையின் போர் விமானியாக நியமிக்கப்பட்ட சுக்லா, ஃபைட்டர் காம்பாட் லீடர் படிப்பு முடித்தார்.

Sugoi, MIG-21, MIG-29, Jaguar, Domnier, BAe Hawk மற்றும் An-32 உள்ளிட்ட பல்வேறு போர் விமானங்களை சுமார் 2,000 மணிநேரத்துக்கும் மேலாக செலுத்திய அனுபவத்தைப் பெற்றிருக்கிறார் சுக்லா.

சமீபத்தில், விங் கமாண்டர் பதவிக்கு உயர்த்தப் பட்ட குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா, மனிதர்களை ஏற்றிச் செல்லும் இந்தியாவின் முதல் விண்வெளிப் பயணமான ககன்யானுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு இந்திய விமானப் படை அதிகாரிகளில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுக்லாவுடன் தேர்ந்தெடுக்கப் பட்ட மற்றொரு விண்வெளி வீரரான குரூப் கேப்டன் பிரசாந்த் பாலகிருஷ்ணன், 1976 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கேரளாவின் திருவாழியாட்டில் பிறந்தவராவார். இவரும் நேஷனல் டிஃபென்ஸ் அகாடமி , படிப்பை முடித்து விட்டு , விமானப்படை அகாடமியில் கவுரவப் பட்டம் பெற்றிருக்கிறார்.

சுமார் 3,000 மணி நேரத்துக்கும் மேலாக போர் விமானங்களை செலுத்திய அனுபவத்துடன், பறக்கும் பயிற்றுவிப்பாளராகவும், சுகோய்-30 ஸ்க்ராட்ரனுக்கு தலைமை தாங்கிய சோதனை விமானியாகவும் இருக்கிறார்.

இந்த இரண்டு விண்வெளி வீரர்களும், இந்தியாவுக்குப் பெருமையை தேடி தருவார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

Falcon 9 ராக்கெட்டில் மூலம் ஏவப்படும் SpaceX Crew Dragon விண்கலம் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து வரும் அக்டோபரில் விண்ணுக்குப் புறப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

14 நாட்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து பணி செய்ய செல்லும் குழுவில் சுக்லாவுடன் போலந்து, ஹங்கேரி மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி வீரர்களும் இருப்பார்கள்.

கேப்டன் சுக்லாவுக்கு BACKUP விண்வெளிவீரராக தான் கேப்டன் பிரசாந்த் பாலகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார். எனவே ராகேஷ் சர்மாவுக்குப் பிறகு 40 ஆண்டுகளுக்குப் பிறகு விண்வெளிக்குச் செல்லும் இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை கேப்டன் சுக்லா பெறுகிறார்.

இந்த விண்வெளி பயணத்தின் போது பெறப்பட்ட அனுபவங்கள் இந்திய மனித விண்வெளி திட்டத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும், இஸ்ரோ மற்றும் நாசா இடையே மனித விண்வெளி விமான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த உதவும் என்றும் இஸ்ரோ தெரிவித்திருக்கிறது .

Tags: ISRO-NASA project is the second Indian to go into space!
ShareTweetSendShare
Previous Post

வங்கதேசத்தில் அதிரடி திருப்பம்! – பதவியை துறந்த ஷேக் ஹசீனா ஆட்சியை பிடித்த ராணுவம்!

Next Post

பாதுகாப்பான இடத்தில் ஷேக் ஹசீனா! – மத்திய அரசு

Related News

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – இருவர் பலி!

அதிமுகவினரை குறிவைத்து குதிரை பேரம் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies