கரூர் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்ததற்கு திமுக அரசே காரணம் - இபிஎஸ் குற்றச்சாட்டு!
Jun 15, 2026, 01:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கரூர் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்ததற்கு திமுக அரசே காரணம் – இபிஎஸ் குற்றச்சாட்டு!

Ramamoorthy S by Ramamoorthy S
Oct 10, 2025, 08:14 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கரூர் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்ததற்கு தமிழக அரசுதான் காரணம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

நாமக்கல் நகரில்  அவர் பேசியதாவது :, திமுக ஆட்சியில் குடிநீரில் மலம் கலக்கப்படுவது வேதனையாக உள்ளது, குறிப்பாக வேங்கைவயல் சம்பவம், சோழவந்தான் சம்பவத்தை மக்கள் மறந்திருக்க முடியாது. குடிநீரில் கழிவை கலந்த நிகழ்வு நடைபெற்றது. அந்த சம்பவங்களில் குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை.

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் இதுவரை குற்றவாளிகள் யார் என கண்டறியப்படவில்லை மேலும் சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டார். அதன் முதல் குற்றவாளி தற்போது உயிரிழந்துள்ளார்.

இந்த வழக்கில் சிபிஐ விசாரணை வேண்டும் என அந்த குடும்பத்தினர் நீதிமன்றத்தை நாடினர். அதற்கான அனுமதியும் நீதிமன்றம் வழங்கி உள்ளது. ஆனால் தமிழக அரசு அதனை எதிர்த்து மேல்முறையீடு செய்கிறது. யாரை பாதுகாப்பதற்காக இவ்வாறான நடவடிக்கைகளில் முதல்வர் ஈடுபடுகிறார். மக்களை பாதுகாக்காத அரசாங்கமாக திமுக உள்ளது என அவ்ர் தெரிவித்தார் .

திமுக ஆட்சிக்கு வந்த ஒரே ஆண்டில் போதை பொருள்கள் பழக்கம் அதிகரிக்க தொடங்கி விட்டது. இளைஞர்கள் பலர் அதற்கு அடிமையாகினர். போதை பொருள்கள் விற்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக சார்பில் எச்சரிக்கை விடுத்தோம். ஆனால் இந்த அரசு கண்டு கொள்ளவில்லை. முதல்வர் ஸ்டாலின் ‘போதை பாதையில் செல்லாதீர்கள்’ என்கிறார். இந்தியாவிலேயே போதைப் பழக்கம் அதிகம் உள்ள மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது. கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் சீண்டல் என தினசரி சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதனை தடுக்காத அரசாங்கமாக திமுக உள்ளது என்றும் அவர் கூறினார்.

கரூர் சம்பவத்திற்கு முன் அங்கொன்றும், இங்கொன்றுமாக போலீஸார் நிற்பர். தற்போது போலீஸார் அதிகளவில் இருப்பதை பார்க்க முடிகிறது. இதற்கு முன் எதிர்க்கட்சிகள் நடத்தும் கூட்டத்திற்கு முழுமையான பாதுகாப்பை வழங்கி இருந்தால் கரூரில் 41 பேர் பலியாகி இருக்க மாட்டார்கள். அதிமுக ஆட்சியில் எவ்வளவு போராட்டங்கள் நடைபெற்ற போது அதற்கான அனுமதியை தடையின்றி கொடுத்தோம். ஆனால் இந்த ஆட்சியில் நீதிமன்றத்துக்கு சென்று அனுமதி வாங்க வேண்டிய நிலை உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

கிட்னி திருட்டுக்கு ஆளாகும் நிலை விசைத்தறி தொழிலாளர்களுக்கு உள்ளது. திமுக எம்எல்ஏ ஒருவரின் மருத்துவமனையில் இவ்வாறான சம்பவங்கள் நடந்துள்ளன. அதிமுக ஆட்சிக்கு வந்ததும் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

மத்திய பிரதேசத்தில் இருமல் மருந்து சாப்பிட்டு 21 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. அந்த மருந்தை தயாரித்த நிறுவனம் சென்னையில் உள்ளது. தமிழக சுகாதாரத் துறைக்கு இது தொடர்பாக எதுவும் தெரியவில்லை. சுகாதாரத்துறை அலட்சியத்தாலே இந்த மாதிரியான  சம்பவங்கள் நிகழ்கின்றன. மீண்டும் அதிமுக ஆட்சி அமையும். தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இபிஎஸ் தெரிவித்தார்.

Tags: karur stampedetvk karur stampedekarur stampede 2025karur stampede newskarur stampede deathkarur stampede causeeps campaginnamakalDMK governmentaiadmkvijya
ShareTweetSendShare
Previous Post

சத்தியமங்கலம் அருகே அரசு பேருந்துக்குள் கொட்டிய மழை நீர் – பயணிகள் அவதி!

Next Post

வழக்கறிஞர் மீதான தாக்குதலுக்கு திருமாவளவனே பொறுப்பு – அண்ணாமலை

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies