விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே கட்டுப்பாட்டை இழந்த சாலையில் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மதுரையைச் சேர்ந்த கார்த்திக் ராஜன் என்பவர் தமது நண்பர்களுடன் திருச்செந்தூருக்கு காரில் சென்றுள்ளார்.
அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி புறவழிச்சாலையில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் கார்த்திக் ராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், காரில் பயணம் செய்த மற்றவர்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.