மேற்கு வங்க மாநிலத்தில் கொலை செய்யப்பட்ட பெண் பயிற்சி மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருக்க நேரிடும் என உடற்கூறு ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
கொல்கத்தா அருகே அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 8-ந்தேதி இரவு பணியில் இருந்த பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சஞ்சய் ராய் என்பவரை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் உடற்கூறு ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. அதில் பெண் பயிற்சி மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருக்க நேரிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.