அதிமுக செயற்குழுவில் முடிவு! : இபிஎஸ் பதவிக்கு கூடுதல் அங்கீகாரம்?
Aug 19, 2026, 08:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அதிமுக செயற்குழுவில் முடிவு! : இபிஎஸ் பதவிக்கு கூடுதல் அங்கீகாரம்?

Murugesan M by Murugesan M
Aug 15, 2024, 04:01 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

எடப்பாடி பழனிசாமியின் தலைமைப் பதவிக்கு கூடுதல் அங்கீகாரம் அளிக்கும் வகையிலும், உட்கட்சி பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும் நாளை நடைபெறும் அதிமுக செயற்குழுவில் எடுக்கப்படவுள்ள முக்கிய முடிவுகள் குறித்து இந்த செய்தி தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

அண்மையில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவிய அதிமுக, ஒரு சில இடங்களில் டெபாசிட்டையும் இழந்திருக்கிறது. தோல்விக்கான காரணங்களை ஆராய எடப்பாடி பழனிசாமி நடத்திய தொகுதி வாரியிலான ஆய்வுக்கூட்டங்களில், வேட்பாளர்கள் தேர்வில் குளறுபடி, மூத்த அமைச்சர்கள் காட்டும் சுணக்கம், தேர்தல் பணிகளில் ஒருங்கிணைப்பின்மை என அடுக்கடுக்கான புகார்களை கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

பிரிந்திருக்கும் அதிமுகவை ஒன்றிணைத்தால் மட்டுமே சட்டமன்றத் தேர்தலை தைரியமாக எதிர்கொள்ள முடியும் என சில நிர்வாகிகள் வெளிப்படையாகவே பேசியதாகவும் கூறப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமி தலைமைப் பொறுப்பேற்ற பின்பு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் தொடங்கி நாடாளுமன்றத் தேர்தல் வரை தோல்விகளை மட்டுமே சந்தித்து வரும் நிலையில், அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் சிலர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.

இத்தகையை பரபரப்பான சூழலில் வெள்ளிக்கிழமை கூடும் செயற்குழுவில் பல்வேறு முக்கிய தீர்மானங்களை நிறைவேற்ற அதிமுக தலைமை திட்டமிட்டுள்ளது. சட்டம், ஒழுங்கு சீர்கேடு, போதைப் பொருட்களின் தாராளப் புழக்கம், மின் கட்டணம், பல்வேறு வரிகள் உயர்வு என திமுகவுக்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதோடு அதிமுகவின் சட்ட விதிகளில் சில திருத்தங்களையும் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட டிடிவி தினகரன், சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் குறித்து யாரும் குரல் எழுப்பக் கூடாது என மாவட்டச் செயலாளர்கள் வாயிலாக அனைத்து செயற்குழு உறுப்பினர்களுக்கும் வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தேர்தல் பணிகளை எளிதாக்கும் வகையிலும், அதிகாரத்தை பகிர்ந்தளிக்கும் வகையிலும் அதிமுகவின் மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கையை 85லிருந்து 100 ஆக உயர்த்துவது தொடர்பாகவும் இந்த செயற்குழு கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படவுள்ளன.

அண்மையில் வழக்கு ஒன்றில் எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் பொதுச்செயலாளர் என குறிப்பிடக்கூடாது என நீதிமன்றம் அறிவுறுத்திய நிலையில், அவருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் வகையில் அதிமுக சட்டவிதிகளில் திருத்தம் மேற்கொள்ளவும் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

திமுகவுக்கு எதிரான கண்டனத்தை பதிவு செய்வதோடு, எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவான பல்வேறு முடிவுகள் எடுக்கப்படவிருக்கும் இந்த செயற்குழு கூட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

Tags: AIADMK working committee decision! : Additional recognition for EPS post?
Share
Tweet
SendShare
Previous Post

பயிற்சி மருத்துவர் கொலை செய்யப்பட்ட விவகாரம்!

Next Post

வைகை எக்ஸ்பிரஸ் ரயிலின் 47வது பிறந்தநாள் கொண்டாட்டம்!

Related News

2027க்குள் 50 புதிய வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் : காத்திருக்கும் புதிய அனுபவம் : நீண்ட தூர ரயில் பயணிகளுக்கு SURPRISE வசதிகள் – சிறப்பு தொகுப்பு!

சீனாவின் கடல் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி : Sea Guardian ட்ரோன்களை குத்தகைக்கு எடுத்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

பாஜகவில் புதிய அணியை களமிறக்கிய நிதின் நபின் : அனைத்து சமூகங்களுக்கும் சமவாய்ப்பு – சிறப்பு தொகுப்பு!

மின்கடத்தி கொள்முதல் முறைகேடு – 50க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு வாகனம் – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

பால் கொள்முதல் விலை உயர்வு – பேரவையில் முதல்வர் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

எப்போது பேச வேண்டும், எப்படி பேச வேண்டும், என்ன பேச வேண்டும் என்பது தெரியும் – முதல்வர் விஜய் பேச்சு!

மருத்துவக் காப்பீட்டுத் தொகை ஆண்டுக்கு 25 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

நெல்லை மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் நீட் தேர்வில் வெற்றி – மருத்துவ கல்லூரியில் படிக்க வாய்ப்பு!

மதுரையில் பூசாரி உயிரிழந்த விவகாரம் – உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!

அரசு நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதை யாரும் தடுக்கவில்லை – உயர் நீதிமன்றம்

தமிழகத்தில் முதற்கட்டமாக 500 விளையாட்டு மைதானங்கள் தரம் உயர்த்தப்படும் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

தென்மாநில முதலமைச்சர்கள் மாநாடு: இன்று சென்னை வருகிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா!

கோவையில் பாஜக சார்பில் தேசிய கொடி பேரணி; நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு

இந்திய பாதுகாப்புத்துறையின் GAME CHANGER ‘பிரம்மோஸ்-NG’ – சிறப்பு தொகுப்பு!

செப். 17 ஆம் தேதி மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies