வங்கதேசத்தில் இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தப்படுவதை கண்டித்து, அமெரிக்காவின் நியூயார்க் நகரில், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தை சேர்ந்த இந்துக்கள் பேரணி நடத்தினர்.
வங்கதேசத்தில் இனப்படுகொலை நிகழ்ந்து வருவதாகவும், 1971-ம் ஆண்டில் நிகழ்ந்தது மீண்டும் நடக்குமோ என்ற அச்சம் எழுவதாகவும், போராட்டத்தில் பங்கேற்றவர்கள் வேதனை தெரிவித்தனர்.