மேக வெடிப்பு காரணமாக தெலங்கானா மாநிலம் ஹைதரபாத்தில் பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
இரவு ஏற்பட்ட மேகவெடிப்பு காரணமாக ஜூப்ளிஹில்ஸ், கட்ச்பவுலி உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் சாலையில் முழுவதும் மழைநீர் பெருக்கெடுத்தது.
மேலும், தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர். இந்நிலையில் கரீம் நகர், பெத்தப்பள்ளி உள்பட 20 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.