மகாராஷ்டிராவில் 2 பள்ளி சிறுமிகள் பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்பட்டதைக் கண்டித்து ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
மகாராஷ்டிரா மாநிலம் பட்லாபூரில் 2 சிறுமிகளுக்கு பள்ளி தூய்மைப் பணியாளர் பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட அப்பகுதி மக்கள், பட்லாபூர் ரயில் நிலையம் சென்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் அந்த பகுதி ஆட்டோ ஓட்டுநர்கள், வியாபாரிகள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இந்தப் போராட்டத்தால் மும்பை மத்திய வழித்தடத்தில் ரயில் சேவை முடங்கியது.