ஐபோன் 16 தொடரின் பிரீமியம் ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் மாடல்களை இந்தியாவில் முதல் முறையாக ஃபாக்ஸ்கான் மூலம் தயாரிக்க ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதற்காக ஸ்ரீபெரும்புதூரில் உள்ள Foxconn ஆலையில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் ஐபோன் தயாரிக்க்படுவதால் பிரீமியம் ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் மாடல் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் ஃபாக்ஸ்கான் மற்றும் டாடா எலக்ட்ரானிக்ஸ் மூலம் ஆப்பிள் தனது முதன்மை ஐபோன் சாதனங்களின் உற்பத்தியை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.