போரை நிறுத்தும் வல்லமை இந்தியாவிடம் இருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கீவ் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உக்ரைன், ரஷ்யா இடையே நடப்பது சச்சரவு மட்டுமல்ல என்பதையும், இந்தப் போருக்கு முக்கிய காரணம் ரஷ்ய அதிபர் புதின்தான் என்பதையும் இந்தியா உணர தொடங்கிவிட்டதாக கூறினார்.
மிகப்பெரிய நாடான இந்தியாவுக்கு உள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி, இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர முடியும் என்றும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் பிரதமர் மோடி உக்ரைன் வந்த சமயத்தில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த குழந்தைகள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி, மோடியை அவமதித்துவிட்டதாகவும் ஜெலென்ஸ்கி குற்றம்சாட்டினார்.