சேலத்திலிருந்து முக்கிய நகரங்களுக்கு வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில், சென்னை எழும்பூர் – நாகர்கோவில் மற்றும் மதுரை-பெங்களூர் கண்டோன்மென்ட் உள்ளிட்ட மூன்று வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.
இதனையொட்டி சேலம் ரயில் நிலையத்தில் மேடை அமைக்கப்பட்டு பள்ளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனை சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் பங்கஜ் குமார் சின்கா தொடங்கி வைத்தார். அப்போது சேலத்திலிருந்து முக்கிய நகரங்களுக்கு வந்தே பாரத் ரயில் இயக்கவேண்டும் என ரயில் பயணிகள் கேட்டுக்கொண்டனர்.,