பல ஆண்டுகளாக பாஜக கடும் போராட்டத்தை சந்தித்ததாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
டெல்லியில் நடைபெற்ற பாஜக உறுப்பினர் சேர்க்கை விழாவில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது :
பாஜக ஒரு சித்தாந்தத்துடன் செல்வதாகவும், எங்களின் சித்தாந்தத்தின் அடிப்படையிலேயே அரசியலை ஆரம்பித்தோம் என தெரிவித்தார் .
பல ஆண்டுகளாக கடும் போராட்டத்தை சந்தித்தாக தெரிவித்த அவர் பல தோல்விகளை, வெற்றிகளையும் சந்தித்ததாக கூறினார். கட்சி பணிகளில் தொடர்ந்து ஈடுபடுவதாகவும் அமித் ஷா தெரிவித்தார்.
பாஜக உலகின் மிகப்பெரிய கட்சி என ஜே.பி. நட்டா கூறியதை சுட்டிக்காட்டிய அவர், தனித்துவமான கட்சி என்றும் தெரிவித்தார். இந்தியாவில் வேறு எந்த அரசியல் கட்சியும் 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஜனநாயக முறையில் சதாஸ்யதா அபியானை நடத்துதிலைலை என்றும் பாஜக மட்டுமே நடத்துவதாகவும் அமித் ஷா தெரிவித்தார்.