பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு புதுப்பிக்கப்பட்ட உறுப்பினர் அட்டையை அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நேரில் வழங்கினார்.
பாஜக தேசிய உறுப்பினர் சேர்க்கை 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. இந்த உறுப்பினர் சேர்க்கையில், புதிய உறுப்பினர்கள் கட்சியில் சேர்த்து கொள்ளப்படுவார்கள். ஏற்கெனவே கட்சியில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் தங்கள் உறுப்பினர் பதிவை புதுப்பித்துக்கொள்ளலர்ம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக உறுப்பினர் சேர்க்கை இயக்கத்தை பிரதமர் மோடி டெல்லியில் செப்டம்பர் 2ஆம் தேதி தொடங்கி வைத்தார். இதனையடுத்து நாடு முழுவதும் உறுப்பினர் சேர்ப்பு பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் டெல்லியில் உள்ள பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி இல்லத்திற்கு தேசிய தலைவர் ஜே.பி.நட்டா , பொதுச்செயலாளர் துஷ்யந்த் குமார் கெளதம் இன்று நேரில் சென்றனர். அப்போது புதுப்பிக்கப்பட்ட உறுப்பினர் அட்டையை அத்வானியிடம் அவர்கள் வழங்கினர்.