பாஜகவில் சாமானியரும் பிரதமராகலாம் என அக்கட்சியின் தேசிய தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி. நட்டா தெரிவித்தார்.
பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாமில் பங்கேற்று அவர் சிறப்புரையாற்றினார். அப்போது, அரசியலமைப்பு சட்டப்படி பாஜகவில் அனைவருக்கும் சமவாய்ப்பு, சம உரிமைகள் வழங்கப்படுவதாகவும், பெரியவர், சிறியவர் என்ற பேதமில்லை என்றும் தெரிவித்தார்.
மற்ற கட்சிகளில் குறிப்பிட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான் தலைவராக முடியும் என கூறிய நட்டா,பாஜகவில் பிரதமர் மோடியை போன்ற எளிய பின்னணியைக் கொண்டவரும் பிரதமராகலாம் என தெரிவித்தார். இதனைத்தொடர்ந்த கட்சி உறுப்பினர் இல்லத்திற்கு ஜே.பி.நட்டா விஜயம் செய்து தேனீர் அருந்தினார்.