ஆறு நியமன உறுப்பினர்களின் ஆதரவோடு மாநிலங்களவையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்துள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலுடன் மாநிலங்களவை எம்.பி.க்களின் எண்ணிக்கை 234-ஆக உயர்ந்துள்ளது. இதில் பாஜகவுக்கு 96 எம்.பிக்களும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 113 எம்.பிக்களும் உள்ளனர்.
இந்நிலையில் மசோதா வாக்கெடுப்புகளில் நியமன உறுப்பினர்கள் பொதுவாகவே அரசுக்கு ஆதரவாக வாக்களிப்பர் என்பதால் 6 நியமன எம்.பிக்களுடன் தேசிய ஜனநாயக கூட்டணியின் பலம் 119-ஆக உயர்ந்துள்ளது.
தற்போதைய மாநிலங்களவையில் மசோதாக்களை நிறைவேற்றுவதற்கான பெரும்பான்மைக்கு 118 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.
ஆகவே, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்துள்ளதால் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை மாநிலங்களவையில் நிறைவேற்ற மத்திய அரசுக்கு சிக்கல் இருக்காது என கூறப்படுகிறது.