அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகைக்காக, விடுதி மாணவர்களை கட்டாய விடுப்பு எடுக்க வைத்து, விளையாட்டு மைதானத்தை சுத்தம் செய்ய வைத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கையில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில், முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.
இதற்காக, மைதானத்தை சுத்தம் செய்வது உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதற்காக, மாவட்ட விளையாட்டு விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களை, கட்டாய விடுப்பு எடுக்க வைத்து, விளையாட்டு மைதானம் சுத்தம் செய்வது, கம்பம் நடுவது போன்ற பல்வேறு பணிகளை மேற்கொள்ள செய்துள்ளனர்.
மாவட்ட விளையாட்டு அலுவலரின் ,இத்தகைய நடவடிக்கையால், சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சியடைந்தனர்.