மூளைச் சாவு அடைந்த சிறுவனின் தோல் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளதாக திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் சுகந்தி தெரிவித்தார்.
ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வரும் பழனிசாமியின் 11 வயது மகன் கிஷோர், உடல் நலக்குறைவால் சிகிச்சை பலனின்றி மூளைச் சாவு அடைந்தார்.
சிறுவனின் உடல் உறுப்பை தானம் செய்ய அவரது பெற்றோர் முன்வந்தனர். இந்நிலையில், மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவக்குழுவினர், கிஷோரின் தோல்களை மட்டும் எடுத்துச் சென்றனர்.
இந்நிலையில், சொந்த ஊரான நடுப்பட்டிக்கு எடுத்துச் செல்லப்பட்ட சிறுவனின் உடலுக்கு, மாவட்ட ஆட்சியர் பூங்கொடி, மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.