வியட்நாமில் யாகி புயல் தாக்கியதில் சுமார் 200 பேர் உயிரிழந்தனர். 125-க்கும் மேற்பட்டோரை காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
புயல் காரணமாக ஆங்காங்கே நிலச்சரிவும் ஆற்றில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டதால், 800-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். வியட்நாம் தலைநகர் ஹனாயில் செங்கடலில் வெள்ளம் வடியத் தொடங்கியதாக தகவல் வெளியானது.