டெல்லியில் நடைபெற்ற ஆசிய பசிபிக் விமான போக்குவரத்து துறை அமைச்சர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
மாநாட்டையொட்டி பாரத் மண்டபத்தில் அமைக்கப்பட்ட கண்காட்சியை பிரதமர் மோடி பார்வையிட்டார். பின்னர், பிராந்தியத்தின் விமான போக்குவரத்தை மேம்படுத்துவதற்கான செயல் திட்டத்தை அவர் வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.