கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தலையிடக் கோரி குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
மேற்கு வங்க பயிற்சி மருத்துவர்கள் முன்னணி சங்கத்தின் சார்பில் எழுதப்பட்டுள்ள கடிதத்தில், பெண் மருத்துவருக்கு நீதி வழங்கப்பட்டால் தான், மேற்கு வங்க சுகாதாரத் துறையின் கீழ் பணியாற்றும் சுகாதாரப் பணியாளர்களாகிய தாங்கள், அச்சமின்றி பொதுமக்களுக்கு கடமை ஆற்ற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோரின் தலையீடு தான் இந்த பிரச்சினைக்கு வழிகாட்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி. நட்டா ஆகியோருக்கும் இந்தக் கடிதத்தின் நகல் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.