காங்கிரஸ் நகர்ப்புற நக்சல்களின் செய்தித் தொடர்பாளராக செயல்படுவதாகவும், நாட்டில் பிளவுபடுத்தும் சக்திகளை ஊக்குவிப்பதாகவும் மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா குற்றம்சாட்டியுள்ளார்.
ஒடிசா மாநிலம் கோர்தாவில் நடைபெற்ற பாஜக உறுப்பினர் சேர்க்கைக்கான பிரச்சார கூட்டத்தில் மத்திய அமைச்சரும், பாஜக தேசிய தலைவருமான ஜெ.பி.நட்டா கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், காங்கிரஸ் நகர்ப்புற நக்சல்களின் செய்தித் தொடர்பாளராக மாறியுள்ளது என்றும், நாட்டில் சிதைக்கும் சக்திகளை ஊக்குவிப்பதாக குற்றம்சாட்டினார்.
பிரதமர் மோடியின் தொலைநோக்கு தலைமையின் கீழ், ‘சப்கா சாத், சப்கா விஸ்வாஸ், சப்கா பிரயாஸ்’ என்ற மந்திரத்துடன் முன்னேறுகிறோம்,” என்று அவர் .கூறினார்.
இந்தியாவில் தேசிய, ஜனநாயகம் மற்றும் கருத்தியல் கட்சியாக இருப்பது பாஜக மட்டுமே என பெருமிதம் தெரிவித்த ஜெ.பி.நட்டா நாட்டில் அதிகபட்ச மக்களின் ஆதரவை பெற்ற கட்சியும் பாஜகவே என கூறினார்.