செந்தில் பாலாஜி அன்று துரோகி, இன்று தியாகியா? என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில்
பாரதிய ஜனதா கட்சி வடசென்னை கிழக்கு மாவட்டம் உறுப்பினர் சேர்க்கை ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேசிய செயற்குழு உறுப்பினர் மற்றும் மாநில பொறுப்பாளர் எச் ராஜா பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது : 471 நாள் கழித்து செந்தில் பாலாஜி நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ளார். வழக்கு நிறைவு பெற்றால் மீண்டும் ஜெயிலுக்கு தான் போக வேண்டும்
குளித்தலை கூட்டத்தில் செந்தில் பாலாஜி பற்றி ஸ்டாலின் என்ன சொன்னார். செந்தில் பாலாஜி குடும்பமே ஊழல் குடும்பம் என்று கூறினார். இதை அவருக்கு நான் போட்டுக் காட்ட வேண்டும்
வடிவேலு மாதிரி பேசக்கூடாது. அது வேற வாய். இது வேற வாய் என்றெல்லாம் சொல்லக்கூடாது. அவர் சொன்னது மட்டும் உண்மை. அன்று துரோகி இன்று தியாகியா?
ஆர்எஸ்எஸ் பேரணிக்கு ஏற்கனவே 2023 ஆண்டு உச்சநீதிமன்ற தீர்ப்பு கொடுத்துள்ளது.ஆனால் ஆளுகின்ற அரசாங்கம் நீதிமன்றங்களை மதிப்பதில்லை. நீதிமன்றத்தீர்ப்புக்கு மரியாதை கொடுப்பதில்லை.
தமிழ்நாடு காவல்துறை எப்படியாவது ஸ்டாலின் அரசாங்கத்திற்கு நீதிமன்றத்தில் தலைகுனிவு ஏற்படுத்த வேண்டும் என திட்டமிட்டு செயல்படுகிறார்கள் என்று தோன்றுகிறது
காஞ்சிபுரத்தில் பவள விழாக்கு எத்தனை பேர் வருவார்கள் என்று கேட்டு தான் அனுமதி கொடுப்பார்களா? இன்று ஆர் எஸ் எஸ் பேரணிக்கு என்ன நிபந்தனை போடுகிறார்களோ அத்தனை நிபந்தனையும் திராவிட முன்னேற்றக் கழக பவள விழாவிற்கு போட வேண்டும். இல்லையென்றால் டிஜிபி அந்த பொறுப்பை சரியாக நிர்வாகம் செய்யவில்லை என்று அர்த்தம் என ஹெச்.ராஜா தெரிவித்தார்.