பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் நடத்திய சர்ஜிகல் ஸ்டிரைக்கிற்கு காங்கிரஸ் கட்சி ஆதாரம் கேட்டதாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.
ஹரியானா சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, ஹிசார் பகுதியில் பாஜக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், இதே செப்டம்பர் 28-ஆம் தேதிதான் பாகிஸ்தானில் இந்திய ராணுவம் சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தியதாகவும், அதை பாராட்ட மனமின்றி, அதற்கான ஆதாரத்தை காங்கிரஸ் கேட்டதாகவும் கூறினார்.
நகர்ப்புற நக்சலைட்டுகளின் கையில் காங்கிரஸ் சிக்கியிருப்பதாகவும், அக்கட்சித் தலைவர்கள் வெளிநாடு செல்லும் போதெல்லாம் நாட்டின் விரோதிகளை சந்தித்து பேசுவதாகவும் பிரதமர் மோடி விமர்சித்தார்.
மேலும் விவசாயிகளுக்கு ஆதரவாக பேசும் காங்கிரஸ் கட்சியினர், தாங்கள் ஆளும் மாநிலங்களில் குறைந்தபட்ச ஆதரவு விலையில் விளைபொருட்களைக் கொள்முதல் செய்வதில்லை என பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.