நெல்லை ஐ.என்.எஸ் கட்டபொம்மன் கடற்படை நிலையம் அருகே சுற்றித்திரிந்த வடமாநிலத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியை போலீசார் மீட்டு அவரது குடும்பத்தினருடன் ஒப்படைத்தனர்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் ஐ.என்.எஸ் கட்டபொம்மன் கடற்படை நிலையம் அமைந்துள்ளது. அப்பகுதியில் சுற்றித்திரிந்த முதியவரை கடற்படை அதிகாரிகள் விஜயநாராயணம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதையடுத்து அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி கந்தர்வ்சிங் என தெரியவந்தது. இதையடுத்து பஞ்சாப்பில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
தகவலை தொடர்ந்து நெல்லை வந்த குடும்பத்தினரிடம் கந்தர்வ்சிங் ஒப்படைக்கப்பட்டார். 13 ஆண்டுகளுக்கு பிறகு கந்தர்வ்சிங்கை சந்தித்த அவரது மகன்கள் கண்ணீருடன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.