ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே தேசிய நெடுஞ்சாலையில் பேட்டரி ஏற்றிவந்த லாரி திடீரென தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானது.
புனேவில் இருந்து எக்ஸிட் பேட்டரிகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று கோவை நோக்கி சென்று கொண்டிருந்தது. பெத்தப்பாளையம் பகுதியில் சென்றபோது லாரியின் டீசல் டேங்க் வெடித்ததாக கூறப்படுகிறது.
லாரியிலிருந்து கரும்பு புகை வெளியேறி தீப்பற்றியதை பார்த்த ஓட்டுநர் ஏழுமலை, லாரியை சாலையோரம் நிறுத்திவிட்டு உயிர் தப்பியுள்ளார். தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் லாரியில் பற்றிய தீயை போராடி அணைத்தனர்.
இருப்பினும், தீ விபத்தில் லாரி மற்றும் பேட்டரிகள் முற்றிலும் எரிந்த சேதமடைந்தது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.