சென்னை கொருக்குப்பேட்டை அருகே உள்ள பிஸ்மி உணவகத்தில் வாங்கிய பிரியாணியில் பல்லி கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை வள்ளலார் நகரைச் சேர்ந்த ராஜ்குமார்
என்பவர் கொருக்குப்பேட்டை பகுதியில் உள்ள பிஸ்மி உணவகத்தில் சிக்கன் பிரியாணி வாங்கி சென்றுள்ளார். பிரியாணியை வீட்டில் இருந்த அனைவரும் பகிர்ந்து சாப்பிட்ட நிலையில், ராஜ்குமாரின் மனைவி சுவாதி மற்றும் அவரது இரண்டு மகன்கள் வாந்தி எடுத்துள்ளனர்.
இதனை தொடர்ந்து பிரியாணியை சோதனை செய்து பார்த்தபோது அதில், இறந்த நிலையில் பல்லி ஒன்று கிடந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து ராஜ்குமார், அவரது மனைவி சுவாதி, இரண்டு மகன்கள் மற்றும் ராஜ்குமாரின் தாயார் ஜெயந்தி என ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.