பாலியல் வழக்கில் சிக்கிய மலையாள நடிகர் சித்திக்கிற்கு முன்ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
நடிகர் சித்திக் மீது நடிகை ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தார். இதன்பேரில் கொச்சி போலீஸில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், அவரை கைது செய்ய இடைக்கால தடை விதித்த உச்சநீதிமன்றம், இந்த விவகாரத்தில் கேரள அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.