மேற்குவங்க மாநிலம் சிலிகுரியில் 20 சதவீத போனஸ் கோரி தொழிற்சங்க நிர்வாகிகள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களை சந்தித்த அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, போராட்டத்தை ஆதரிக்க முடியாது என்றும், தொழிலாளர் நலத்துறை ஆணையரை சந்தித்து தொழிற்சங்க நிர்வாகிகள் கோரிக்கைகளை முறையிடலாம் என்றும் தெரிவித்தார்.
மேலும், தொழிற்சங்க நிர்வாகிகள் போராட்டத்தில் தாம் குறுக்கிட விரும்பவில்லை என்றும் அவர் கூறினார்.