நாமக்கல்லில் ஏடிஎம் கொள்ளையர்களை பிடித்த காவல்துறையினருக்கு டிஜிபி சங்கர் ஜிவால் பாராட்டு சான்றிதழை வழங்கினார்.
கேரள மாநிலம் திருச்சூரில் ஏடிஎம்மில் கொள்ளை அடித்த வடமாநில கும்பல் நாமக்கல் மாவட்டம் வழியாக கண்டெய்னர் லாரி மூலம் தப்ப முயன்றது. அப்போது வெப்படை அருகே கொள்ளையர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். இந்த சம்வத்தில் வட மாநில கொள்ளையன் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், காவல் அதிகாரிகள் இருவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் மருத்துவமனைக்கு சென்ற டிஜிபி சங்கர் ஜிவால் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். இதனை தொடர்ந்து நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்ற டிஜிபி சங்கர் ஜிவால், கொள்ளையர்களை பிடிக்கும் பணியில் ஈடுபட்ட, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட 23 பேருக்கு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.
அப்போது அவருடன், மேற்கு மண்டல ஐஜி செந்தில்குமார், சேலம் சரக டி.ஐ.ஜி உமா, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் உடனிருந்தனர்.