விசிக தலைவர் திருமாவளவனின் மதுஒழிப்பு மாநாடு ஒரு நாடக அரசியல் என விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தேமுதிக முப்பெரும் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட விஜயபிரபாகரன், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து பேசிய அவர், செழிப்பாக இருந்த தேனி மாவட்டம் திமுக ஆட்சி வந்தவுடன் தண்ணீர் பஞ்சத்தில் இருப்பதாக தெரிவித்தார்.
செந்தில் பாலாஜி மக்கள் போராட்டத்திற்காக சிறை சென்றாரா என கேள்வி எழுப்பிய அவர், முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட வழக்கில் தான் செந்தில் பாலாஜி சிறைக்கு சென்றதாக தெரிவித்தார். விசிக தலைவர் திருமாவளவனின் மது ஒழிப்பு மாநாடு ஒரு நாடக அரசியல் எனவும் அவர் விமர்சித்தார்.