சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ம் கட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கிய பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழகத்தின் நீண்டநாள் கோரிக்கைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என்றும்,
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ம் கட்ட பணிகளை விரைவில் நிறைவேற்றுவோம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
தனது டெல்லி பயணத்தின் போது பிரதமர் மோடி உடனான சந்திப்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகளை ஏற்று ஒப்புதல் அளித்ததற்கு நன்றி என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.