இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் வாங்காமல் பணிகள் மேற்கொண்ட போதும், அதற்கு மத்திய அரசு அனுமதியும் வழங்கி, நிதியும் ஒதுக்கியுள்ளதாக என பாஜக மாநில ஒருங்கிணைபக்குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
சென்னை, தி. நகரில் உள்ள பாஜக மாநில தலைமையகமான கமலாலயத்தில், எம்.ஜி.ஆர். மக்கள் மன்றத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். தொடர்ந்து அவர்களுக்கான உறுப்பினர் அட்டையை பாஜக மாநில ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஹெச்.ராஜா, இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் மத்திய அரசிடம் ஒப்புதல் பெறாமலே நீட்டிக்கப்பட்டது என குற்றம் சாட்டினார். இருப்பினும் மத்திய அரசு திட்டதிற்கு அனுமதியும் வழங்கி நிதியும் ஒதுக்கியுள்ளதாக தெரிவித்தார்.
இன்று அனைத்து ரேஷன் கடைகளிலும் வழங்கப்படும் அரிசி, பருப்பு, மத்திய அரசின் முழு மானியத்தில் இருந்து கிடைக்கிறது என எழுதிப் போட வேண்டியது தானே. ஏன் அதனை செய்வதில்லை என்றும் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பினார்.