சாதி, மொழி மற்றும் மாகாண ரீதியாக வேறுபட்டு கிடக்கும் இந்துக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் வலியுறுத்தியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் பரன் நகரில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களின் கூட்டத்தில், அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத் பங்கேற்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், சமூக ஒற்றுமைக்கு ஒழுக்கம், இலக்கை நோக்கிய மனப்பான்மை உள்ளிட்ட அத்தியாவசியப் பண்புகள் அவசியம் தேவை எனக் கூறினார்.
இந்து மதம் அனைவரையும் அங்கீகரித்து ஏற்றுக் கொள்வதாகவும், பரஸ்பர மரியாதையை வலியுறுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஒரு தேசத்தின் புலம்பெயர்ந்தோரின் பாதுகாப்பு அவர்களின் தாயகம் சக்திவாய்ந்ததாக இருக்கும்போது மட்டுமே உத்தரவாதம் அளிக்கப்படுகிறது; இல்லையெனில், பலவீனமான தேசத்திலிருந்து வெளிநாட்டவர்கள் வெளியேறுமாறு கட்டளையிடப்படுகிறார்கள் என்றும் அவர் கூறினார்.
சமூகம், தெய்வீக லட்சியங்களின் மீதான கூட்டு ஆர்வத்தின் மூலமாகவே வளர்வதாகவும் அவர் கூறினார். மேலும், சாதி, மொழி மற்றும் மாகாண ரீதியாக வேறுபட்டு கிடக்கும் இந்துக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் மோகன் பகவத் வலியுறுத்தினார்.