வேலைவாய்ப்பு வழங்கும் விஷ்ணு கர்மா திட்டத்தை, குலத் தொழில் எனக்கூறி திமுக ஒடுக்க நினைப்பது இளைஞர்களை பாதிக்கும் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் வண்ணிப்பாக்கம் கிராமத்தில் பாலமுருகன் கோவில் புதிதாக கட்டுவதற்கான அடிக்கல் நடும் பூமி பூஜை விழாவில் கலந்து கொண்ட
இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, ஒவ்வொரு ஆண்டும் சர்ச்சுகள் மசூதிகள் அதிக அளவில் கட்டப்படுகின்றன. ஆனால் இந்து கோவில்கள் குறைந்த அளவிலே கட்டப்படுகின்றன. 42 ஆயிரம் கோயில்களை நிர்வகிக்கும் இந்து சமய அறநிலைத்துறை கோவில்களில் வரும் வருமானங்களை புதிய கோயில்கள் இல்லாத ஊரில் ஆங்காங்கு கட்ட வேண்டுமென கோரிக்கை வைப்பதாக தெரிவித்தார்.
மத்திய அரசின் விஷ்ணு கர்மா திட்டம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கும் திட்டம். இதில் ஜாதி முத்திரை குத்துவது சரி இல்லை. முதல்வரின் மகன் முதல்வராகலாம். அது குலத்தொழில் அல்ல. சிற்பியின் மகன் சிற்பம் செய்தால் அது குலத்தொழிலா என கேள்வி எழுப்பிய அர்ஜுன் சம்பத், விஷ்ணு கர்மா திட்டத்தை திமுக உள்ளிட்ட கட்சிகள் குல தொழில் என கூறி ஒடுக்கநினைப்பது இளைஞர்களை பாதிக்கும் என்று கூறினார்.
மெட்ரோ ரயிலுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கி உள்ளது. மத்திய அரசுக்கு எதிராக விஷம பிரச்சாரம் செய்வது கண்டிக்கத்தக்கது என்றும், துணை முதல்வர்
உதயநிதி ஸ்டாலின் மீண்டும் தாய் மதம் திரும்ப வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
முதல்வர் மு க ஸ்டாலின் தமிழகத்தில் அதிகரிக்கும் போதை கஞ்சாவை ஒழிப்பதற்கு சர்வாதியாக மாறினால் நாங்கள் வரவேற்போம் என்றும் அவர் தெரிவித்தார்.