சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
சென்னை எழும்பூரில் நடைபெறும் ஆர்.எஸ்.எஸ் பேரணியில் மத்திய இணை அமைச்சர் எல் .முருகன் பங்கேற்றுள்ளார். பேரணி எழும்பூர் ரமடா ஹோட்டல் அருகில் இருந்து தொடங்கி புதுபேட்டை வழியாக சென்று ராஜரத்தினம் அரங்கில் முடிவடைகிறது.
இதனையொட்டி எழும்பூர் புதுப்பேட்டை, பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கம் சார்பில் 99ம் ஆண்டு விஜயதசமி விழா, ஸ்ரீ அஹல்யாபாய் ஹொல்கர் 300வது ஜெய்ந்தி விழா, சுப்பிரமணிய சிவா 140 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு பேரணி தொடங்கியது.
ஒட்டன்சத்திரம் செக்போஸ்ட் ரவுண்டானாவில் பேரணி தொடங்கியது. இந்த பேரணி காய்கனி மார்க்கெட், பேருந்து நிலையம், தாராபுரம் சாலை, மின்வாரிய அலுவலகம் வரை சென்று நிறைவு பெறுகிறது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து 450க்கும் மேற்பட்ட ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவகர்கள் பங்கேற்றுள்ளனர். இதேபோல் சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.