ஹரியானாவில் பாஜக வரலாற்றுச் சாதனை புரிந்ததாக மத்திய அமைச்சரும் அம்மாநில முன்னாள் முதலமைச்சருமான மனோகர் லால் கட்டார் பெருமிதம் தெரிவித்தார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஹரியானாவில் காங்கிரஸை பொதுமக்கள் நிராகரித்துவிட்டதாகவும், பிரதமர் மோடியின் நலத்திட்டங்கள் அம்மாநிலத்தில் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தியதாகவும் குறிப்பிட்டார்.
மேலும் ஹரியானாவில் ஒரே கட்சி தொடர்ந்து மூன்று முறை ஆட்சியமைப்பது வரலாற்று சாதனை என்றும் மனோகர் லால் கட்டார் பெருமிதம் தெரிவித்தார்.
முன்னதாக ஹரியானாவில் பாஜக மூன்றாவது முறையாக தொடர்ந்து ஆட்சியமைப்பதையொட்டி, டெல்லியில் மனோகர் லால் கட்டார் வீட்டின் முன் பாஜகவினர் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.