ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றிய பாஜகவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஹரியானாவில் மொத்தம் 90 தொகுதிகளுக்கு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், 48 இடங்களை வென்று பாஜக ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தலில் தொடர்ச்சியாக 3-வது முறை வெற்றி பெற்றதுடன், நடப்பு தேர்தலில். அதிக வாக்கு சதவீதத்தை பெற்ற கட்சி என்ற அந்தஸ்தை பாஜக பெற்றுள்ளது.
பாஜகவிற்கு அடுத்தப்படியாக காங்கிரஸ் 37 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
இந்திய தேசிய லோக் தளம் 2 தொகுதிகளிலும், சுயேட்சை வேட்பாளர்கள் 03 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
ஹரியானாவில் 3-ஆவது முறையாக தொடர்ச்சியாக பாஜக ஆட்சியமைக்கும் நிலையில், அம்மாநில மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், இது வளர்ச்சி மற்றும் நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி என்றும், மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்கான எந்தவொரு வாய்ப்பையும் தவறவிட மாட்டோம் என தெரிவித்துள்ளார்.
ஜம்மு- காஷ்மீரில் பாஜகவுக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி கூறிய பிரதமர் மோடி, கட்சிக்காக உழைத்த தொண்டர்களுக்கு பாராட்டு தெரிவித்தார். மேலும் ஜம்மு- காஷ்மீர் சட்டப் பேரவைத் தேர்தலில் வென்ற தேசிய மாநாட்டுக் கட்சிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.