ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி முதல் இடத்தையும்,பாஜக இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளன.
பத்து ஆண்டுகளுக்கு பிறகு ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி மொத்தம் 42 இடங்களை கைப்பற்றியுள்ளது.
சிறப்பு அந்தஸ்தை நீக்குவதால் தேர்தல் முடிவுகள் பாஜக-வுக்கு பாதகமாக அமையும் என எதிர்க்கட்சிகள் குறைகூறி வந்த நிலையில், அந்த குற்றச்சாட்டுகளை பாஜக முறியடித்து காட்டியுள்ளது.
மொத்தம் 29 தொகுதிகளில் வெற்றி வாகை சூடி, தேர்தலில் 2-வது இடத்தை பிடித்துள்ளது.தேசிய மாநாட்டு கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட காங்கிரஸ் 6 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது.
மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சி மூன்று இடங்களிலும், மக்கள் மாநாட்டு கட்சி, ஆம்ஆத்மி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. சுயேட்சை வேட்பாளர்கள் 7 தொகுதிகளில் வெற்றி கண்டுள்ளனர்.