ஆவடி அருகே போதைப் பொருள் விற்பனை குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்த இளைஞரை, மது பாரில் வைத்து மர்ம கும்பல் ஒன்று அரிவாளால் வெட்டி படுகொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அடுத்துள்ள திருமுல்லைவாயல் ஆரிக்கமேடு பகுதியை சேர்ந்த முத்து என்பவர், அங்குள்ள ஒரு மது பாரில் தனது நண்பர்களுடன் மது அருந்தி கொண்டு இருந்துள்ளார்.
அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று, முத்துவை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். படுகாயம் அடைந்த முத்துவை மீட்ட போலீசார், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இதனிடையே, கஞ்சா விற்பனை குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தன் காரணமாகவே, மர்ம கும்பல் தன்னை தாக்கியதாக முத்து புகார் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.