அரசு உதவ கோரிக்கை! : நலிவடைந்து வரும் அரிவாள் தயாரிப்பு!
Aug 18, 2025, 07:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அரசு உதவ கோரிக்கை! : நலிவடைந்து வரும் அரிவாள் தயாரிப்பு!

Web Desk by Web Desk
Oct 10, 2024, 03:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அறுவடைக் கருவிகளில் மிகப்பழமையான கருவி என்றால் அது அரிவாள் தான். தற்போது நலிவடைந்து வரும் அந்த அரிவாள் தயாரிப்பு தொழிலை காக்க வேண்டுமென்பதே பலரது கோரிக்கையாக உள்ளது. அது பற்றிய ஒரு சிறப்பு செய்தி தொகுப்பு..!

மனித வரலாற்றில் உலோகங்களின் வருகைக்கு முன்பு வரை கல் கருவிகளே பயன்படுத்தப்பட்டு வந்தன. அதன் பிறகு மனித நாகரீக வளர்ச்சியின் முதல் படியாக உலோகங்கள் உருவாக்கப்பட்ட பிறகு இரும்பினாலான கருவிகளே இன்று வரை பயன்பாட்டில் உள்ளது. அந்த வகையில் அறுவடைக் கருவிகளில் மிகவும் பழமையான ஒன்று, என்றால் அது அரிவாள் தான். உலகம் முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்படும் அரிவாள்கள் தோட்டக்கலை கருவிகளில் மிகவும் முக்கியமான இடத்தில் உள்ளது. இன்றைய நவீன காலக்கட்டத்தில் கிராமங்கள் மட்டுமின்றி, நகரங்களில் உள்ள வீடுகளில் கூட அரிவாள்கள் பயன்படுத்தப்பட்டு கொண்டுதான் இருக்கின்றன. விவசாயம் முதல் இறை வழிபாடு வரை முக்கிய இடத்தில் உள்ள இந்த அரிவாள்களை சில குடும்பங்கள் பரம்பரை பரம்பரையாக இன்றளவும் தயாரித்து வருகின்றன.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள தென்கரை என்ற சிறு கிராமத்தில் 100 வருடங்களுக்கும் மேலாக, தங்களது குடும்பத் தொழிலாக 20 தொழிலாளர்கள் அரிவாள்களை தயாரித்து வருகின்றனர். இந்த ஊரில் ஒரு அடி முதல் 18 அடி வரையிலான அரிவாள்கள் தயாரிக்கப்படுகின்றன. விறகு வெட்ட பயன்படக்கூடிய அரிவாள்கள், இளநீர் வெட்டும் அரிவாள்கள், விவசாய பணிகளுக்கான அரிவாள்கள், வாங்கு அரிவாள்கள், சாமிக்கு நேர்த்திக்கடன் அரிவாள்கள், கருக்கரிவாள்கள், சூலாயுதம், உள்ளிட்ட ஆயுதங்கள் இந்த கிராமத்தில் பாரம்பரியமாக உற்பத்தி செய்யப்படுகின்றன.

சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர், திருக்கோஷ்டியூர், ஓலைக்குடிப்பட்டி, மருதிப்பட்டி, அரண்மனை சிறுவயல், முப்பையூர் என சுற்றுவட்டார பகுதிகளில் அரிவாள்கள் தயாரிக்கும் தொழில்கள் நடைபெற்று வந்தாலும், தென்கரையில் தயார் செய்யப்படும் அரிவாள்கள் தரம் குறையாமல் உழைக்கக் கூடியதாக இருப்பதாக தெரிவிக்கும் வாடிக்கையாளர்கள், விவசாய வேலைக்கு இங்கு வாங்கும் அரிவாள்களே தரமாக இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

தென்கரையில் தயார் செய்யப்படும் அரிவாள்கள் 15 வருடங்கள் வரை உழைக்கக்கூடியது என்றும், கனரக வாகனங்களுக்கு அடியில் பொருத்தப்படக்கூடிய உருக்கு பட்டைகளை ஆதாரமாகக் கொண்டு தயாரிக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர் அரிவாள் தயாரிக்கும் உற்பத்தியாளர்கள்.

மூலதனப் பொருட்களின் விலையேற்றத்தால் தற்போது தொழில் மிகவும் மந்த கதியில் நடைபெறுவதாக வேதனை தெரிவிக்கும் உற்பத்தியாளர்கள், உடல் உழைப்பை மிகவும் அதிகமாக கொடுக்கக்கூடிய கடினமான தொழிலாக இருப்பதால் வேலை ஆட்கள் கிடைப்பதில் பற்றாக்குறை ஏற்பட்டு, தொழில் நலிவடைந்து வருவதாக தெரிவிக்கின்றனர்.

அறுவடை கருவிகளில் மிகவும் பழமையான அரிவாள்களை காக்க வேண்டுமென்றால் அந்த தொழில் செய்யும் உற்பத்தியாளர்களுக்கு அரசு உதவிகள் செய்ய வேண்டுமென்பதே பலரது கோரிக்கையாக உள்ளது.

Tags: Request to help the government! : Declining scythe production!
ShareTweetSendShare
Previous Post

முத்தாலம்மன் கோயில் திருவிழாவை ஒட்டி எருதுகட்டு விழா கோலாகலம்!

Next Post

ரத்தன் டாடா மறைவு! – பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி இரங்கல்!

Related News

செஞ்சி நாதக கூட்டத்தில் செய்தியாளர்களை பவுன்சர்கள் தாக்க முயற்சி!

சத்தியமங்கலம் திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் – 3 மணி நேரம் சிக்கி தவித்த வாகன ஓட்டிகள்!

திருக்கோவிலூர் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை!

விடுமுறை முடிந்து ஒரே நேரத்தில் சென்னை திரும்பிய பயணிகள் – உளுந்தூர் பேட்டை சுங்கச் சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல்!

தமிழக ரயில் திட்டங்களுக்கு நடப்பாண்டில் ரூ.6626 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சர் எல்.முருகன்

10.5 சதவீத இடஒதுக்கீடு, சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டும் – டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

ரஷ்யா உக்ரைன் போர் நிறுத்த பேச்சுவார்த்தை – ஜெலன்ஸ்கியை இன்று சந்திக்கிறார் ட்ரம்ப்!

என்டிஏ குடியரசு துணை தலைவர் வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணன் தேர்வு – பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

என்டிஏ குடியரசு துணை தலைவர் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் கடந்து வந்த பாதை!

என்டிஏ குடியரசு துணைத்தலைவர் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் – பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா அறிவிப்பு!

லாஸ் வேகாஸை புரட்டிப்போட்ட அதிபர் டிரம்பின் நடவடிக்கை : பொருளாதார நெருக்கடியால் திண்டாடும் மக்கள்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள் – 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

AI தொழில்நுட்பத்தால் மனித குலம் அழியும் அபாயம் : தீர்வை விளக்கும் AI-யின் ‘காட் ஃபாதர்’!

அம்பத்தூர் அருகே படவட்டம்மன் கோயில் ஆடி மாத திருவிழா – பால்குடம் எடுத்த பக்தர்கள்!

இந்திய ரயில்வேயின் புதிய மைல்கல் : பறக்கத் தயாரானது ஹைட்ரஜன் ரயில்!

திமுக ஆட்சியில் அமைச்சர் வீடுகளிலேயே அமலாக்கத்துறை சோதனை – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies